இந்த புகைப்படத்திற்கு பில்டர் தேவையில்லை. கோலியுடனான புகைப்படத்தை பகிர்ந்து நெகிந்த அனுஷ்கா

By manimegalai aFirst Published Nov 5, 2021, 7:39 PM IST
Highlights

விராட் கோலியின் 33 வது பிறந்தநாளான இன்று அவரது மனைவி அனுஷ்கா சர்மாவின் வாழ்த்து இணைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் அண்டர் 19 கேப்டன்களில் சீனியர் டீமுக்கும் கேப்டனான உள்ளவர் விராட் கோலி. கிரிக்கெட் உலக பிரபலமான கோலியும் பாலிவுட் பிரபலமான நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாள் காதலுக்கு பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு  டிசம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் இத்தாலியில் விமர்சியாக நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக இருக்கும் இவர்கள் சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக உள்ளனர்.

இந்நிலையில் இன்று கிரிக்கெட் ராக்ஸ்டாரான விராட் கோலி தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பல தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையே தனது கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் விதமாக அனுஸ்கா சர்மா தனது சமூக வலைதளத்தில் கோலியுடனான புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் ; இந்த புகைப்படத்திற்கும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வழிநடத்தும் விதத்திற்கும் வடிகட்டி தேவையில்லை. உங்கள் வாழ்க்கை நேர்மை மற்றும் துணிச்சலால் ஆனது. சந்தேகத்தை மறதிக்குள் தள்ளும் தைரியம். உங்களைப் போல் இருண்ட இடத்தில் இருந்து எடுக்கக்கூடியவர்கள் யாரும் இல்லை என்று எனக்குத் தெரியும். உங்களில் எதனையும் நிரந்தரமாகப் பற்றிக் கொண்டு அச்சமற்றவர்களாக இருப்பதால் நீங்கள் எல்லா வகையிலும் சிறப்பாக வளர்கிறீர்கள். நாங்கள் இப்படி சமூக ஊடகங்கள் மூலம் ஒருவருக்கொருவர் பேசுபவர்கள் அல்ல என்று எனக்குத் தெரியும், ஆனால் சில சமயங்களில் நீங்கள் என்ன ஒரு அற்புதமான மனிதர் என்று நான் கற்று  உலகுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்களை உண்மையிலேயே அறிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். எல்லாவற்றையும் பிரகாசமாகவும் அழகாகவும் மாற்றியதற்கு நன்றி.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இவ்வாறு தெரிவித்துள்ளார்.

click me!