என்னை மலேஷியாவுக்கு அழைத்தார் வைரமுத்து; மறுத்ததால் என் பாடகி ஆகும் கனவையே நாசமாக்கிவிட்டார் ; இளம் பெண் புகார்;

By manimegalai aFirst Published Oct 24, 2018, 1:49 PM IST
Highlights

”மீ டூ”வில் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து , வேறு சில பெண்களும் வைரமுத்து மீது தங்கள் தரப்பில் இருந்து புகார் தெரிவித்து வருகின்றனர். 15 வருடங்களுக்கு முன்னர் சுவிச்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது நடை பெற்ற சம்பவத்தினை தற்போது சின்மயி “மீ டூ”வில் தெரிவித்திருக்கிறார். அதே போல வைரமுத்து தன் அம்மாவிடம் தவறாக பேசினார் என்று ஒரு பெண்ணும் கூறி இருந்தார்.

”மீ டூ”வில் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து , வேறு சில பெண்களும் வைரமுத்து மீது தங்கள் தரப்பில் இருந்து புகார் தெரிவித்து வருகின்றனர். 15 வருடங்களுக்கு முன்னர் சுவிச்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது நடை பெற்ற சம்பவத்தினை தற்போது சின்மயி “மீ டூ”வில் தெரிவித்திருக்கிறார். அதே போல வைரமுத்து தன் அம்மாவிடம் தவறாக பேசினார் என்று ஒரு பெண்ணும் கூறி இருந்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றின் போது பேசிய ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரைஹானா கூட வைரமுத்து அப்படிப்பட்டவர் தான் என்பது அனைவரும் அறிந்தது தான். என்னிடமே பலர் புகார் தெரிவித்திருந்தனர் என கூறி இருந்தார். தற்போது திரைத்துறையில் பாடகியாக முயன்ற சிந்துஜா ராஜா ராம் என்ற பெண்ணும்  வைரமுத்து மீது இதே மாதிரியான புகாரை முன் வைத்திருக்கிறார்.
 
பாடாகி ஆக முயன்ற சிந்துஜா ஒரு பாடல் பதிவின் போது வைரமுத்துவை சந்தித்திருக்கிறார். அப்போது அவரின் குரல் மற்றும் தமிழ் உச்சரிப்பு தனக்கு பிடித்திருப்பதாக கூறி பாராட்டிய வைரமுத்து சிந்துஜாவின் செல்ஃபோன் நம்பரை வாங்கி இருக்கிறார்.அதன் பிறகு போனில் அடிக்கடி பேசிய வைரமுத்து சிந்துஜாவிடம் ” ஒரு அறிவான பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறேன் . என் தேடல் உன்னால் முடிந்துவிடுமோ?உன் கண்கள் என்ன கூர்வாளா? என் கவிதைகளை துண்டு துண்டாக்கி உன் காலில் போடுகிறதே என்றெல்லாம் பேசி இருக்கிறார். என்னிடம் இப்படி எல்லாம் பேசாதீர்கள் என சிந்துஜா கோபப்பட்டிருக்கிறார்.

அதன் பிறகு ஒருமுறை தான் மலேஷியா செல்லவிருப்பதாக தெரிவித்த வைரமுத்து , சிந்துஜாவையும் உடன் வருமாறு அழைத்திருக்கிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததும் உன்னை சினிமாத்துறையிலே இல்லாதபடி செய்துவிடுவேன் என்று மிரட்டினாராம் வைரமுத்து.  மேலும் சொன்னது போலவே செய்துவிட்டார். எனக்கான எல்லா கதவுகளையும் அடைத்துவிட்டார், அதனால் தான் என்னால் திரைத்துறையில் பாடாகியாக முடியவில்லை. இப்போது சின்மயி இந்த விஷயத்தை பேச ஆரம்பித்த பிறகு தான் எனக்கும் தைரியம் கிடைத்தது. அதனால் தான் இப்போது இந்த விஷயத்தை கூறினேன் என தெரிவித்திருக்கிறார் சிந்துஜா.

தொடர்ந்து வைரமுத்து மீது சமூக வலைதளங்களில் இது போல பல புகார்கள் வந்தாலும் ஆதாரப்பூர்வமாகவோ,அல்லது சட்டப்படியோ எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!