தக் ஷாவுக்கு மீண்டும் திரும்புகிறார் அஜித்...? அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு!

Published : Feb 01, 2019, 05:25 PM IST
தக் ஷாவுக்கு மீண்டும் திரும்புகிறார் அஜித்...? அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு!

சுருக்கம்

ஆளில்லா ஏர் டாக்ஸி தயாரிக்கும் திட்டத்தில் பணியாற்றிய நடிகர் அஜித்துக்கு கெளரவ ஆலோசகர் பதவி வழங்க அண்ணா பல்கலைக்கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது.

ஆளில்லா ஏர் டாக்ஸி தயாரிக்கும் திட்டத்தில் பணியாற்றிய நடிகர் அஜித்துக்கு கெளரவ ஆலோசகர் பதவி வழங்க அண்ணா பல்கலைக்கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது.

ட்ரோன் மூலம் வானில் பறக்கும் ஏர் டாக்சி கடந்த ஆண்டு துபாயில் அறிமுகமானது. இதெல்லாம் இந்தியாவில் சாத்தியமா என்ற கேள்வி எழுந்ததுபோது, அதை நடிகர் அஜித் குமார் தொழில்நுட்ப வழிகாட்டியாகக் கொண்ட தக் ஷா மாணவர் குழு சாத்தியப்படுத்தியது. இக்குழு இந்தியாவில் முதன் முறையாக ட்ரோன் மூலம் வானில் பறக்கும் ஏர் டாக்ஸியைத் தயாரித்தது. 

இதன் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவுற்றது. இதனால், நடிகர் அஜித் குமாருக்கும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாராட்டு குவிந்தது. இந்தத் திட்டப் பணி முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் நடிகர் அஜித் குமாருக்கு பாராட்டு தெரிவித்து, அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏர் டாக்ஸி தயாரிக்கும் திட்டத்தில் பங்கேற்று 10 மாதங்களாகப் பணியாற்றிய நடிகர் அஜித்தின் பங்களிப்பை  இந்தக் கடிதத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பாராட்டியுள்ளது. அந்தக் கடித்ததில் வருங்காலத்தில் விருப்பம் இருந்தால் கெளரவ பதவியில் ஆலோசகராகப் பணியாற்ற வேண்டும் என்று அஜித் குமாரிடம் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!