
புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, மற்றும் ஜனனி ஐயர் இணைந்து நடித்திருக்கும் படம் `பலூன்’. இந்த படம் காதல் கலந்த திகில் படமாக உருவாகியுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பின்னர் ஜெய் மற்றும் அஞ்சலி மீண்டும் 'பலூன்' திரைப்படத்தில் இணைத்து நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. மேலும் ஜெய் இந்த படத்தில் 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அஞ்சலி இந்த படத்தில் இவர் நடித்துள்ள கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணியை தொடங்கியிருக்கிறார் . இதனை தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.