
திருமணம் முடிந்த உடனே, நடிகை சோனம் கபூருக்கு அவரது கணவர் ஆனந்த் புதிய கட்டுப்பாட்டை விதித்து உள்ளார்
இந்தி நடிகை சோனம் கபூருக்கு, நேற்று முன்தினம் திருமணம் நடைப்பெற்றது.
இதனை அடித்து தனது கணவர் ஆனந்த் அஹூஜா தனக்கு விதித்து இருக்கும் தடையை பற்றி பேசி உள்ளார்
அதில், "ஆனந்த் எனக்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்து உள்ளார். படுக்கை அறைக்கு செல்போனை கொண்டு போகக்கூடாது என்பது தான் அது. அவருக்கும் இந்த தடை பொருந்தும் என அவர் தெரிவித்து உள்ளார்
பொதுவாகவே தூங்க செல்லும் முன் செல்போனை வேறு ஒரு அறையில் வைத்துவிட்டு தூங்க செல்வேன். இதுவரை அப்படிதான் நான் செய்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வெளியே நான் பேச மாட்டேன்.
சமூக வலைத்தளம் என் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு என்ன போஸ்ட் போட வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்றும் கூறினார்
மேலும படுக்கை அறையில் செல்போனை வைக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள், மேலும் செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுகிறது. இதனால் தான் கணவர் ஆனந்த் இது போன்ற கட்டுப்பாட்டை விதித்து உள்ளார் என தெரிவித்து இருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.