சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான பிரகதியை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு... அந்த அளவிற்கு தன்னுடைய இனிமையான குரலால், சிறு வயதில் இருந்தே ரசிகர்கள் மனதை பாடல்கள் மூலம் கொள்ளைக்கொண்டவர்.
அதிலும் இவர் சூப்பர் சிங்கர் பைனலின் போது பாடிய பாடல் இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கக் கூடிய பாடலில் ஒன்றாக இருந்து வருகிறது.
தமிழில் 'பனித்துளி' திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகியாக தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய இவர், 'பரதேசி', 'காதலும் கடந்து போகும்', 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
இந்நிலையில் இவர் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வேறு யாரும் இல்லைங்க... தெகிடி, சூதுகவ்வும், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள, நடிகர் அசோக் செல்வன் தான். தற்போது இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
இவர்களுடைய காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் ஏற்கனவே தெரியும் என்றும், விரைவில் இவர்கள் திருமண பந்தத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.