வேலை நிறுத்தத்தில் பங்கு பெறமாட்டோம்... தமிழ் திரைப்பட வர்த்தக சபை அதிரடி !

First Published May 21, 2017, 12:33 PM IST
Highlights
amirami ramanathan press release


தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் மைய குழு கூட்டம்  இன்று அதன் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் வரும் 30ந் தேதி வேலைநிறுத்தம் என்று அறிவித்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, ஏற்கனவே முதலமைச்சரை நேரில் சென்று திரை உலக குறைகளை சொன்ன உடனேயே அதிகாரிகளை அழைத்து அதற்கான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பித்து விட்டதால், 30ந் தேதி மட்டும் அல்ல வேறு எந்த தேதி யிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் என அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர் சங்கமும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பும் ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் பங்கு பெறமாட்டோம் என்று அறவித்துள்ளது போல் தற்போது  தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது என்று அறிவித்துள்ளது.

கூட்டத்தில் தலைவர் அபிராமிராமநாதன், கலைப்புலி எஸ்.தாணு, அன்புசெழியன், சரத்குமார், சேரன், ராதாரவி, எஸ் வீ சேகர், ஜேகே ரித்தீஷ், பன்னீர்செல்வம், கே முரளீதரன், சிவசக்திபாண்டியன், டி சிவா, ஏஎல் அழகப்பன், டிஜி தியாகராஜன், ராதாகிருஷ்ணன்,  சுரேஷ் காமாட்சி, சித்ராலட்சுமணன், கேஎஸ் சீனிவாசன், விஜயகுமார்,  தனஞ்ஜெயன், பிரமிட் நடராஜன், டாக்டர் சீனிவாசன், சுந்தரேசன், மூர்த்தி உள்பட ஏராளமான தயாரிப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 

click me!