
இயக்குனர் ராஜமௌலி இயக்கிவரும் 'RRR' படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஆலியா பட், விமான நிலையத்தில் அவரை சந்தித்த போது வாய்ப்பு கேட்டேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
'பாகுபலி' படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி, உலக சினிமாவையே, தென்னிந்திய திரைப்படங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி படத்தின் மெகா ஹிட் வெற்றிக்கு பிறகு தற்போது நடிகர் ராம் சரண் தேஜா, மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடித்து வரும் 'RRR ' படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படம்.
இந்நிலையில், இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும், ஆலியாபட் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், ஒருமுறை இயக்குனர் ராஜமௌலியை விமான நிலையத்தில் பார்த்ததாகவும், அவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் தன்னை ஈர்த்ததால், அவருடைய இயக்கத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்திலாவது நடித்திட வேண்டும் என தோன்றியது. அதனால் விமான நிலையத்திலேயே அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டேன். ஆனால் அவர் கதாநாயகி வாய்ப்பு கொடுத்துள்ளார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.