என்னது..பாலியல் தொழிலாளர்களுடன் பழகிய ஆலியா பட்...காரணத்தை கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்..

By Kanmani PFirst Published Feb 7, 2022, 2:02 PM IST
Highlights

'கங்குபாய் கத்தியவாடி' படத்தில் பாலியல் தொழிலாளியாகவும், அரசியல்வாதியாகவும் அலீயா பட் நடித்துள்ளார்...

ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரி ஆலியா பட். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தற்போது கங்குபாய் கத்தியவாடி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை ஆலியா பட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மும்பையையே கலக்கிய பெண் கேங்கஸ்டரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. பாலியல் தொழிலாளியாக இருந்த ஒரு பெண் எப்படி அண்டர்கிரவுண்ட் டான் ஆனார் என்பதே இப்படத்தின் சுருக்கமான கதை. மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்கிற புத்தகத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில் இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் அலீயா பட் மும்பையில் உள்ள ரெட் லைட் ஏரியாவுக்கு சென்று வந்ததாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அலீயா பட் கங்குபாய் படத்திற்காக தான் சென்றதாக தெரிகிறது.

ஏனென்றால் அவர் நடிக்க இருந்தது மிகப் பெரிய கதாபாத்திரம் என்பதால் தான், மும்பையில் உள்ள ரெட் லைட் ஏரியாவிற்கு சென்று பாலியல் தொழிலாளிகளுடன் அலீயா பட் பழகியதாகவும் அவர்களது நடை உடை பாவனை மற்றும் சில அம்சங்களை கற்றுக் கொண்டதாகவும் அதனால் தான் இந்த படத்தில் அலீயா பட் தத்ரூபமாக நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரின் தத்ரூபமான நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு மிகப் பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது.

click me!