Akhanda : அகண்டா படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பு மற்ற மொழி திரை பிரியர்களின் மத்தியில் ஓங்கியுள்ளது.
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தனது அதிரடி நடிப்பாலும், மாஸ் டைலாக்குகளாலாலும் ரசிகர்களை தன வைத்துள்ளனர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே அங்குஉண்டு.
இவரின் லெஜண்ட் மற்றும் சிம்ஹா வெற்றிக்கு பிறகு இயக்குனர் போயபதி ஸ்ரீனு மற்றும் நடிகர் பாலகிருஷ்ணா ஆகியோர் மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் அகண்டா. மாஸ் மசாலா படமாக உருவாகியுள்ள திரைப்படமான இதில் நடிகர் பால கிருஷ்ணா இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பிரக்யா ஜெய்ஸ்வால் ஐஏஎஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும், ஜெகபதி பாபு அகோரியாவும் நடித்துள்ளார். இவர்களுடன் நந்தமுரி பாலகிருஷ்ணா, அவினாஷ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அகண்டா படம் கடந்த டிசம்பர் 2-ம் தேதி வெளியாகி மாஸ் வெற்றி பெற்று வருகிறது. இது குறித்து ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்த தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, "அகன்டா திரைப்படம், மகத்தான தொடக்கத்தைப் பெற்றுள்ளது என்பதைக் கேட்பதில் மிகவும் மகிழ்ச்சி! நந்தமுரிபாலகிருஷ்ணா, போயபதி ஸ்ரீனு மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்". என கூறியுள்ளார்.
உலக நடுகல் பலவற்றிலும் திரையிடப்பட்டுள்ள இந்த படம் ஆந்திராவில் மூன்று நாட்களில் ரூ.7,03 கொடியையும், அமெரிக்காவில் சுமார் இந்திய மதிப்பில் ரூ. 5 கொடிக்கு மேலும் வசூல் செய்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
முழுக்க முழுக்க மாஸ் திரைப்படமாக தெலுங்கு மொழி திரைப்படமாக வெளியாகி ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. சராசரியான திரைக்கதை.இருப்பினும், பாலகிருஷ்ணா வித்தியாசமாக நடிப்பும் பஞ்ச் டைலாக்குகளும் அரங்கத்தை அதிர செய்து வருகிறது.
இந்நிலையில் அகண்டா படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியாகுமா என்கிற எதிர்[பார்ப்பு மற்ற மொழி திரை பிரியர்களின் மத்தியில் ஓங்கியுள்ளது.