ஐஸ்வர்யா பின்னணி இவ்வளவு மோசமா? பண மோசடி! புழல் சிறை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

By manimegalai aFirst Published Sep 30, 2018, 9:15 PM IST
Highlights

பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியில் மிகவும் விமர்சிக்கப்பட்ட போட்டியாளர் என்றால் அது பெங்காலி பொண்ணு நடிகை ஐஸ்வர்யா தத்தா தான்.

பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியில் மிகவும் விமர்சிக்கப்பட்ட போட்டியாளர் என்றால் அது பெங்காலி பொண்ணு நடிகை ஐஸ்வர்யா தத்தா தான். இவர் மிகவும் கொடூரமாக நடந்து கொண்ட விதம் பிடித்து கூட இவருக்கு தொடர்ந்து பல ரசிகர்கள் உருவாகி விட்டனர். பிக்பாஸ்சில்   ஓவியாவுக்கு பிறகு அதிகம் பேசப்பட்ட நடிகை இவர் என்றும் கூறலாம்.

நான்காவது வாரத்திலேயே வெளியேறி விடுவார் என அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில், ஃபைனல் வரை நிலையாக நின்று விளையாடி வருகிறார்.

தற்போது இவரை பற்றி வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது பிக்பாஸ் வீட்டில் தெரிந்தவர் யாருக்காவது போன் செய்து பேசலாம் என போட்டியாளர்களுக்கு சொல்லப்பட்டது. அதில் ஐஸ்வர்யா போன் செய்த நபர் பெயர் கோபி. 

அந்த கோபி யார் என்கிற விவரம் தான் ஒட்டு மத மக்களையும் அதிர்ச்சியாகி உள்ளது. 

கோபி சில வருடங்களுக்கு முன் கோடிக்கணக்கில் பொதுமக்களின் பணத்தைச் சுருட்டிய குற்றச்சாட்டில் கைதாகி, புழல் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்தவராம். 

நிதி நிறுவனம் நடத்தி, குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கித் தருவதாக நூற்றுக்கணக்கானவர்களிடம் பல கோடி ரூபாயைச் சுருட்டியதாகக் கைது செய்யப்பட்டார். அவர் பண மோசடி செய்ய வைத்திருந்த கம்பெனியில் ஐஸ்வர்யாவும் ஒரு பார்ட்னராக இருந்துள்ளார். இந்த தகவலை பண மோசடியால் ஏமாற்றப்பட்ட ஒரு நபர் வெளியிட்டுள்ளார்.

click me!