சர்ச்சைக்கு பின் சூர்யாவுக்காக வெளியே வரும் டிடி..!

 
Published : Jan 11, 2018, 06:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
சர்ச்சைக்கு பின் சூர்யாவுக்காக வெளியே வரும் டிடி..!

சுருக்கம்

after long days ago dd anchoring surya program

பிரபல தொகுப்பாளினி டிடி என்ன செய்தாலும் அவர் எப்படிப் பேசினாலும் அதனை ரசிக்க தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் சிரித்துக் கொண்டே கலகலப்பாக பேசுவது பலருக்கும் பிடிக்கும். பல தனியார் தொலைக்காட்சிகளில் ஏராளமான தொகுப்பாளர்கள் வந்தும் இது வரை டிடியின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை என்றே கூறலாம்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய கணவர் ஸ்ரீகாந்திடம் இருந்து விவாகரத்து பெற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். டிடி.,க்கு திருமணமான ஓரிரு வருடங்களிலேயே இவர் இப்படி ஒரு முடிவை எடுத்தது இவருடைய ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது இவர் பிரபல நடன இயக்குனர் சதீஷுடன் பப்பில் வித்தியாசமாக நடனமாடியதும் சிறு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஏற்கெனவே டிடி விவாகரத்து மனு தாக்கல் செய்தது முதல், எந்த ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்தார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் தற்போது இவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு, சூர்யா நடித்து பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியாக உள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படம் குறித்து சூர்யா தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் நிகழ்ச்சியை சூர்யாவிற்காக தொகுத்து வழங்க வருகிறாராம்.

இதனால் சூர்யா ரசிகர்களும், டிடி ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!