விமானத்தில் நடிகருடன் தகராறு! போதை இளைஞர்களை புரட்டி எடுத்த இளம் நடிகை!

Published : Sep 22, 2018, 02:55 PM IST
விமானத்தில் நடிகருடன் தகராறு! போதை இளைஞர்களை புரட்டி எடுத்த இளம் நடிகை!

சுருக்கம்

கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ராஷ்மிகா மந்தானா, கன்னட நடிகர் ரசீத் ஷெட்டியை காதலித்து திருமணம் செய்து கொள்ள இருந்தார்.

கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ராஷ்மிகா மந்தானா, கன்னட நடிகர் ரசீத் ஷெட்டியை காதலித்து திருமணம் செய்து கொள்ள இருந்தார்.திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசீத் ஷெட்டியுடனான காதலை முறித்துக் கொண்ட அவர், தாம் நடிக்க இருந்த கன்னட படத்தில் இருந்து விலகினார்.

இதனால், கன்னட படங்களில் ராஷ்மிகா மந்தனா இனி நடிக்க மாட்டார் என வதந்தி பரவிய நிலையில், அப்படி எல்லாம் இல்லை என்றும், கன்னட படங்களில் தொடர்ந்து நடிக்கப் போவதாகவும் கூறி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இதனிடையே, நடிகர் நாகர்ஜுனா, நானி ஆகியோருடன் இணைந்து தேவதாஸ் என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில்,தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தில், தேவதாஸ் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில்,நாகர்ஜுனா, நானி, ராஷ்மிகா மந்தனா உள்பட பல திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நாகர்ஜுனா, தாய்லாந்தில் இருந்து விமானத்தில் வந்தபோது, நடிகை ராஷ்மிகா மந்தனா தம்மை காப்பாற்றிய சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அது குறித்து நாகர்ஜுனா பேசியதாவது, “தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது, நானும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் அருகருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தோம்.

அப்போது, எங்கள் பின்னால் போதையில் அமர்ந்திருந்த 2 பேர், இருக்கையை காலால் உதைத்துக் கொண்டே இருந்தனர். மேலும், என்னைப் பற்றி அவர்கள் கிண்டல் அடித்துக் கொண்டே வந்தனர். ஒரு கட்டத்தில் போதை ஆசாமிகள், எனது இருக்கையை வேகமாக உதைத்தபோது நான் கீழே விழப்போனேன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் என்னை தாங்கிப்பிடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, பின்னால் அமர்ந்திருந்த நபர்களிடம் அடிதடியில் இறங்கினார். இருவர் கன்னத்திலும் மாறி மாறி அறைந்தார் ராஷ்மிகா மந்தனா. நானே போதை ஆசாமிகளை ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்தபோது, ராஷ்மிகா மந்தனாவின் துணிச்சல் எனக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது.

எனவே அவருக்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” என நாகர்ஜுனா பேசினார். நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அடிதடி செயலை நாகர்ஜுனா வெளியிட்டதை அடுத்து, தெலுங்கு திரையுலகில் அவர் பிரபலமாக பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!