8 ஃபுல்பாட்டில்... 2 கிரேடு பீருடன் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன்..!

Published : Jun 13, 2020, 11:12 AM IST
8 ஃபுல்பாட்டில்... 2 கிரேடு பீருடன் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன்..!

சுருக்கம்

பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு தனது காரில் மதுபாட்டில்களை கொண்டு வந்த போது நடிகை ரம்யா கிருஷ்ணனின் கார் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   

பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு தனது காரில் மதுபாட்டில்களை கொண்டு வந்த போது நடிகை ரம்யா கிருஷ்ணனின் கார் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பாண்டிச்சேரியில் இருந்து வந்த ரம்யா கிருஷ்ணனின் இன்னோவா காரை கிழக்கு கடற்கரை சாலை ச்க்போஸ்டில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சரக்குகள் சிக்கின. சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. எனவே வெளியூரில் மது வாங்கி சென்னைக்கு எடுத்துச்செல்வது கடத்தலாகக் கருதப்படும் எனப்போலீஸார் விளக்கியதும் ரம்யா கிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார். கார் கானாத்தூர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

பின்னர் காரை ரம்யா கிருஷ்ணனே ஓட்டி சென்னை திரும்பினார். சென்னையை சீல் வைக்கப்போகிறார்கள் என்கிற வதந்தியால் பிரபலங்கள் அவசரமாக வெளியூர்களில் இருந்து வண்டி வண்டியாக சரக்கு வாங்கி வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Vijay Trisha: நைட்டு 12 மணிக்கு; முதல்வர் விஜய் வீட்டில் த்ரிஷா என்ன செஞ்சிருக்காங்க பாருங்க... வைரலாகும் பர்த்டே போஸ்ட்
Vijay : திரிஷாவுக்கு நன்றி... ரஜினிக்கு திட்டு - விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காததால் கிளம்பிய சர்ச்சை..!.