அவசரப்படாதீங்க... 8 வருடத்திற்க்கு பின் தமிழ் படத்தில் நடிக்கிறேனா? பூஜா ஹெக்டே கொடுத்த விளக்கம்!

Published : Apr 01, 2020, 11:11 AM IST
அவசரப்படாதீங்க... 8 வருடத்திற்க்கு பின் தமிழ் படத்தில் நடிக்கிறேனா? பூஜா ஹெக்டே கொடுத்த விளக்கம்!

சுருக்கம்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான, 'முகமூடி' படத்தில், நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை பூஜை ஹேக்டே. இந்த படம் தோல்வியை தழுவியதால், இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான, 'முகமூடி' படத்தில், நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை பூஜை ஹேக்டே. இந்த படம் தோல்வியை தழுவியதால், இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். இந்நிலையில் இவர், நடிகர் சூர்யா, இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ள 'அருவா ' படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ள, நடிகை பூஜா... 'ஹெலோ ஹெலோ நான் தமிழ் படங்களில் நடிக்க முடிவெடுத்து விட்டேன் என்கிற முடிவிற்கு செல்லவேண்டாம். நான் இதுவரை தமிழ் படத்தில் நடிக்க கையெழுத்து இடவில்லை . இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த வருடம் தமிழ் படத்தில் நடிப்பேன் என எதிர்பார்ப்பதாகவும் பூஜா கூறியுள்ளார்.

இதில் இருந்து, நடிகை பூஜா ஹெக்டே 'அருவா' படத்தில் கமிட் ஆனதாக வந்த தகவலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார். அதே போல் ரசிகர்கள் தகவல் உறுதியாகும் முன் அவரசப்படவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?