நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது..! நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை..!

By manimegalai aFirst Published Sep 26, 2020, 5:30 PM IST
Highlights

குழந்தை முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய இனிமையான குரலால் கட்டி போட்டு, தாலாட்டும் இசையில் பல பாடல்களை பாடிய  பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஒரே அடியாக உறங்க சென்று விட்டார். அவர் இனி இல்லை என்பதை மனம் ஏற்க மறுத்தாலும், அதுவே உண்மை.
 

குழந்தை முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய இனிமையான குரலால் கட்டி போட்டு, தாலாட்டும் இசையில் பல பாடல்களை பாடிய  பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஒரே அடியாக உறங்க சென்று விட்டார். அவர் இனி இல்லை என்பதை மனம் ஏற்க மறுத்தாலும், அதுவே உண்மை.

இவருடைய மறைவிற்கு பல கோடி ரசிகர்கள், சமூக வலைத்தளம் மூலமும் நேரடியாகவும் வந்து தங்களுடைய அஞ்சலியை செலுத்திய நிலையில், நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டு தன்னுடைய இரங்கலையும், எஸ்.பி.பி குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தெய்வீகக்‌ குரல்‌ இனி இல்லை என்பதை நினைக்கும்‌ போதே நெஞ்சம்‌ பதறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த திரு எஸ்பி பாலசுப்ரமணியம்‌ சாருடைய குரல்‌, நம்முடைய எல்லா காலங்களுக்கும்‌, காரணங்களும்‌ பொருந்தி இருக்கும்‌.

நீங்கள்‌ இனி இல்லை என்பதை மனம்‌ நம்ப மறுக்கிறது... ஆயினும்‌ உங்கள்‌ குரல்‌ என்றென்றும்‌ நீங்கா புகழுடன்‌ இருக்கும்‌. உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல்‌ சொல்லிக்‌ கொள்ளும்‌ இந்த நேரத்தில்‌ கூட உங்கள்‌ பாடல்‌ மட்டுமே பொருந்துகிறது. எங்கள்‌ வாழ்வில்‌ உங்களின்‌ ஆளுமை அப்படி. நீண்ட காலமாக இடைவிடாமல்‌ உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம்‌ இல்லாமல்‌ பிரியா விடை கொடுக்கிறோம்‌. பாடும்‌ நிலா விண்ணிலிருந்து பாடட்டும்‌. உங்களை பிரிந்து வாடும்‌ உங்கள்‌ குடும்பத்தாருக்கும்‌, நண்பர்களுக்கும்‌, உங்கள்‌ திரை உலக சகாக்களுக்கும்‌, உலகெங்கும்‌ பரவி இருக்கும்‌ உங்கள்‌ எண்ணற்ற ரசிகர்களுக்கும்‌ என்‌ மனமார்ந்த ஆறுதல்‌ செய்தி இது... இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!