“அடியே குந்தாணி சோறு நீயா போடுவ?”.... எல்லை மீறிய நெட்டிசனை கிழித்து தொங்க போட்ட நடிகை மஞ்சிமா...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 25, 2020, 10:39 AM IST
Highlights

அதற்கு நெட்டிசன் ஒருவர் அடியே குந்தாணி சோறு நீயா போடுவ? என்று நக்கலாக கேட்டிருந்தார். 
 

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் நடித்த “அச்சம் என்பது மடமையடா” என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவார் மலையாள நடிகை மஞ்சிமா மோகன். அதன் பின்னர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் உடன் “தேவராட்டம்” படத்தில் நடித்தார். இந்தப் படத்துக்குப் பிறகு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், திரையுலகில் தனக்கு வந்த வாய்ப்புகள் எதிலுமே மஞ்சிமா நடிக்காமல் இருந்தார். 

தற்போது கால் முற்றிலும் குணமான நிலையில், விஷ்ணு விஷாலின் FIR படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கினார். உலகம் முழுவதும் கொரோனா பீதி உச்சத்தில் இருக்கும் நிலையில், அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்பதை வலியுறுத்தி ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் தாங்கள் வீட்டில் இருப்பதையும், ஓய்வு நேரத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என்பதும் குறித்து வீடியோ மற்றும் ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அப்படி நடிகை மஞ்சிமா போட்ட ட்வீட் ஒன்றை நெட்டிசன் ஒருவர்  எல்லை மீறி கலாய்க்க கடுப்பான மஞ்சிமா கடுமையாக சாடியுள்ளார். <blockquote class="twitter-tweet"><p lang="tr" dir="ltr">Adiye kunthaani soru neeya poduva.</p>&mdash; குழந்தை Talks (@maanniiiiiii) <a href="https://twitter.com/maanniiiiiii/status/1242369222677676035?ref_src=twsrc%5Etfw">March 24, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இதையும் படிங்க: என்னது இது கொரோனா மாஸ்க் சைஸுக்கு டிரஸ் போட்டிருக்கீங்க... சாக்‌ஷியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

ஊரடங்கை மீறி மக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வருவது குறித்து கவலை தெரிவித்திருந்த மஞ்சிமா, வீட்டில் இருப்பதில் மக்களுக்கு என்ன கஷ்டம் என்று புரியவில்லை. வீட்டிலேயே இருங்கள் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு நெட்டிசன் ஒருவர் அடியே குந்தாணி சோறு நீயா போடுவ? என்று நக்கலாக கேட்டிருந்தார். <blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">And then we have people like this! I usually don&#39;t reply to these kinda tweets but this is what I get for asking people to stay at home. If you thinks it&#39;s easy for anybody to stay at home without going for work you are wrong bro! Money doesn&#39;t fall from the sky for us! <a href="https://t.co/U3RMzXegqv">https://t.co/U3RMzXegqv</a></p>&mdash; Manjima Mohan (@mohan_manjima) <a href="https://twitter.com/mohan_manjima/status/1242370494487072775?ref_src=twsrc%5Etfw">March 24, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்....!

இதனால் கடுப்பான மஞ்சிமா, இப்படியும் சிலர் இருக்காங்க. இந்த மாதிரி ட்விட்களுக்கு நான் வழக்கமாக பதில் அளிக்க மாட்டேன். வீட்டில் இருங்கள் என கூறியதற்கு எனக்கு கிடைத்தது இதுதான். வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பது அவ்வளவு சுலபம் என நீங்கள் நினைத்தால் அது தவறு. எங்களுக்கு மட்டும் பணம் வானத்தில் இருந்து கீழே விழுவதில்லை" என்று சகட்டு  மேனிக்கு நெந்தியடி பதில் கொடுத்துள்ளார். 
 

click me!