தாயாக வரவேற்கிறேன்...! ஆனால்? நிர்பயா கொலை குற்றவாளிகள் தூக்கு பற்றி நடிகையின் நறுக் கேள்வி!

Published : Mar 20, 2020, 10:42 AM IST
தாயாக வரவேற்கிறேன்...! ஆனால்? நிர்பயா கொலை குற்றவாளிகள் தூக்கு பற்றி நடிகையின் நறுக் கேள்வி!

சுருக்கம்

கடந்த 2012 ஆம் ஆண்டு, நிர்பயா என்ற மாணவியை அக்ஷய் குமார், குமார் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங், ஆகிய  நான்கு பேர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து தூக்கி வீசினர்.  

கடந்த 2012 ஆம் ஆண்டு, நிர்பயா என்ற மாணவியை அக்ஷய் குமார், குமார் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங், ஆகிய  நான்கு பேர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து தூக்கி வீசினர்.

இதில் படுகாயமடைந்த நிர்பயா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கடந்த 7 வருடமாக நடைபெற்ற நடைபெற்று வந்த வழக்கில், நிர்பயா கொலை  வழக்கில் தொடர்புடைய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் நிர்பயாவின் தாய் ஆஷா thevi விடாப்பிடியாக தன்னுடைய மகளின் மரணத்திற்கு காரணமான 4 பேரையும் தூக்கில் இட வேண்டும் என நீதிமன்றத்தில் போராடி வந்த நிலையில், இன்று காலை 5:30 மணி அளவில் நிர்பயாவின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சுமார் அரை மணி நேரம் அவர்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டு அவர்கள் இறப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், திகார் சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ஒரு தாயாக இந்த தண்டனையை வரவேற்று உள்ளதாகவும். ஆனால் இதற்கு 7 ஆண்டுகள் தேவைப்பட்டது ஏன் என்பது போலவும்  தண்டனைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டால்  மட்டுமே, குற்றங்கள் குறையும் என தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!