‘அந்த ஹோட்டல் முதலாளி என்னைக் கண்களால் கற்பழித்தார்’...ஒரு நடிகையின் திகில் வாக்குமூலம்...

By Muthurama LingamFirst Published Jul 9, 2019, 10:10 AM IST
Highlights

இனி அக்கம் பக்கம் போகிற பெண்களை பார்க்கிறபோது கூட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக ஹோட்டல் மேனேஜர் ஒருவர் தன்னைக் கண்ணாலேயே கற்பழித்ததாக பிரபல நடிகை ஒருவர் பரபரப்பு கிளப்பியுள்ளார்.
 

இனி அக்கம் பக்கம் போகிற பெண்களை பார்க்கிறபோது கூட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக ஹோட்டல் மேனேஜர் ஒருவர் தன்னைக் கண்ணாலேயே கற்பழித்ததாக பிரபல நடிகை ஒருவர் பரபரப்பு கிளப்பியுள்ளார்.

’பேபி’, ’ரஸ்தம்’ உள்பட பல இந்தி படங்களில் நாயகியாக நடித்தவர் இஷா குப்தா. தமிழில் ’யார் இவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இஷா குப்தா தனது தோழிகளுடன் டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு இரவு விருந்து சாப்பிட சென்றார். அவர் சாப்பிட்டு கொண்டிருந்தபோது ஓட்டல் உரிமையாளர் ரோகித் விக் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துள்ளார்.ரோகித்தின் செயலால் இஷா கோபம் அடைந்துள்ளார். அந்த சம்பவத்தை ஆன் த ஸ்பாட் தனது ட்விட்டரில் பதிவிட்ட இஷா குப்தா,... ஓட்டலில் ஒருவர் என்னை தன் கண்களால் பலாத்காரம் செய்தார். ஒழுங்காக நடந்து கொள்ளுமாறு இரண்டு, மூன்று முறை கண்டித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதை அடுத்து என்னுடைய 2 பாதுகாவலர்களும் என்னை சுற்றி நிற்க வேண்டியதாகி விட்டது.

ஓட்டலில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவே இதற்கு சாட்சி. அந்த நபரின் பெயரை கண்டுபிடித்து கூறுங்கள்என்று இஷா கோரிக்கை விடுத்தார். இஷாவை கண்களால் பலாத்காரம் செய்த நபரின் பெயர் ரோகித் விக் என்று ரசிகர்கள் கண்டுபிடித்தனர். துரதிர்ஷடவசமாக அந்த ஹோட்டலின் உரிமையாளரே அவர்தான். இதை அடுத்து இஷா ரோகித்தின் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அவரை மீண்டும் விளாசி உள்ளார். ஒரு பெண்ணாக பிறந்தது சாபக்கேடா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இணையங்களில் இருக்கும்  இஷா குப்தாவின் புகைப்படங்கள் அத்தனையும் அரை மற்றும் முக்கால் நிர்வாணப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!