பிறந்தநாளில் ஹன்சிகா வைத்த கோரிக்கை... அத்தோடு செய்த மனம் நெகிழ வைக்கும் காரியம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 9, 2021, 8:28 PM IST
Highlights

கொரோனா லாக்டவுன் காரணமாக மும்பையில் குடும்பத்துடன் தங்கியுள்ள ஹன்சிகா, அங்கேயே நேற்று தன்னுடைய பிறந்தநாளையும் குதூகலமாக கொண்டாடினர்.

நடிகை ஹன்சிகா தமிழ் திரையுலகின் குட்டி குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, நடிப்பில் அசத்தி வந்த இவர் தற்போது பார்ட்னர், மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ் ஆகிய படங்களின் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

பட வாய்ப்புக்காக கொழுகொழுவென இருந்த ஹன்சிகா, ஓவர் ஸ்லிம்மாக மாறியும் பட வாய்ப்பு கிடைக்காததுதான் மிகப்பெரிய ஏமாற்றம் என்றும் கூறலாம். தற்போது தன்னுடைய  50வது படமாக உருவாகியுள்ள 'மகா' படத்தின் பணிகளும் கிட்டதட்ட  முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் இந்த படம் குறித்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தெலுங்கில் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க உள்ளார். குறிப்பாக சாதனை முயற்சியாக 105 நிமிடம் எடுக்கப்பட உள்ள படத்தில் ஒரே ஷாட்டில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.  

கொரோனா லாக்டவுன் காரணமாக மும்பையில் குடும்பத்துடன் தங்கியுள்ள ஹன்சிகா, அங்கேயே நேற்று தன்னுடைய பிறந்தநாளையும் குதூகலமாக கொண்டாடினர். அத்துடன் தன்னுடைய பிறந்தநாளில் கேன்சரால் பாதிக்கப்பட்ட 10 பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களது மருத்துவ செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டுள்ளார். ஹன்சிகாவின் இந்த செயல் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. போதாக்குறைக்கு கொரோனா பரவல் காரணமாக அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தனது பிறந்தநாளில் கோரிக்கை விடுத்துள்ளார்.

click me!