
அண்மையில், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த 370வது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் , லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படவுள்ளது. இதுகுறித்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. எனவே வரும் அக்டோபர் மாதம் இம்மாநிலம் முறைப்படி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படவுள்ளது.
மத்திய அரசின் இந்த, முடிவிற்கு இந்தியாவில் மட்டும் இன்றி, சர்வதேச அளவில் பலரிடம், வாழ்த்துக்களை மட்டும் இன்றி , எதிர் மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
அதே போல் பிரபலங்களும் சிலர் தங்களுடைய ஆதரவையும் , கண்டனங்களையும் மாறி... மாறி தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை கெளதமி திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் காஷ்மீரில் ஏற்பட்ட மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளதாக அதிரடியாக தன்னுடைய கருத்தைதெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.