
மலையாள திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின், 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். இந்நிலையில் நடிகை திவ்யா உன்னிக்கு, கடந்த ஜனவரி மாதம் மூன்றாவது குழந்தை பிறந்த நிலையில், தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகை திவ்யா உன்னி, கடந்த 2016ஆம் ஆண்டு கணவர் டாக்டர் சுதீரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று பிரிந்த பின், 2018 ஆம் ஆண்டு ஹூஸ்டனில் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் அருண்குமார் என்பவரை மறுமணம் செய்துக்கொண்டார்.
ஏற்கனவே திவ்யா உன்னிக்கு, அர்ஜூன் மற்றும் மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமானார். இவருக்கு மிகவும் பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சியை செய்து அழகு பார்த்துள்ளார் திவ்யா உன்னியின் இரண்டாவது கணவர் அருண் குமார்.
இந்நிலையில், ஜனவரி மாதம் திவ்யா உன்னிக்கு மூன்றாவதாக அழகிய பெண் குழந்தை பிறந்தது. பிறந்து இரண்டு மாதமே ஆகும் தன்னுடைய குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.
அந்த புகைப்படம் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.