
சீரியல் தொடர்களில் நடிக்க நடிகைகள் கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்க வேண்டும் என்கிற காலம் மாறிப்போய், தற்போது கலராக இருந்தால் மட்டும் போதும், மொழி தெரியாவிட்டாலும் அவர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்து நடிக்க வைத்து விடலாம் என நினைக்கின்றனர் சீரியல் தொடர் இயக்குனர்கள்.
அந்த வகையில் சமீப காலமாக தமிழ் சீரியல்களில் கேரளா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த நடிகைகள் அதிக அளவில் நடித்து வருகின்றனர்.
இதுகுறித்து மிகவும் கோபமாக பேசியுள்ளார் 'நாச்சியார்', பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல் தொடர்களில் நடித்துவரும் நடிகை சித்ரா.
இது குறித்து வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சித்ரா. பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. கேரளா, கர்நாடகா, என வேறு மாநில பெண்கள் வெள்ளையாக இருக்கின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக, தமிழ் சீரியல்களில் அவர்களை ஒப்பந்தம் செய்கின்றனர்.
ஆனால் நான் ரொம்ப கலர் கிடையாது, டஸ்கி கலர் தான் ஆனால் இதுவும் அழகு தானே. நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்குற பெண்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என தெரிவியவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.