சமீபத்தில் தான் தன்னுடைய 69 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்த, நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த், உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக தற்போது துபாய் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தான் தன்னுடைய 69 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்த, நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த், உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக தற்போது துபாய் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயகாந்துக்கு, கடந்த 2014ம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, திடீர் என உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் எடுத்த பின்னரும், அவரது உடல் நிலை மோசமாகிக்கொண்டே சென்றதால், மனைவி, பிரேமலதா, மற்றும் மகன்களுடன் சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்தார். இதில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
தற்போது சீரான உடல்நிலையுடன் விஜயகாந்த் இருந்தாலும், அவ்வப்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மாதாந்திர உடல் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எந்த ஒரு வெளிநாடுகளுக்கும் உடல் பரிசோதனைக்காக செல்லாமல் இருந்த விஜயகாந்த், தற்போது துபாய் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மேலும் வெளியாகியுள்ள தகவலில் லண்டனை சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் விஜயகாந்த் அவர்களுக்கு, நடைபயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சி கொடுப்பதற்காக, துபாய் வர உள்ளதாகவும், மேலும் விஜயகாந்துக்கு அங்கு உடல் பரிசோதனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக விஜயகாந்த், தன்னுடைய இரண்டாவது மகன் மற்றும் உதவியாளருடன் துபாய் புறப்பட்டு சென்றுள்ளார்.