விஜய்க்கு கணக்கு தெரியவில்லை - பிரபல அரசியல்வாதி கருத்து......!!! 

Asianet News Tamil  
Published : Nov 16, 2016, 10:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
விஜய்க்கு கணக்கு தெரியவில்லை - பிரபல அரசியல்வாதி கருத்து......!!! 

சுருக்கம்

பிரதமர்  மோடி 500, 1000ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நேற்று விஜய் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பு அடைய செய்துள்ளது.

ஒருசில அரசியல்வாதிகள் விஜய்யின் கருத்தை ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், விஜய் கூறிய கருத்து குறித்து கூறுகையில், விஜய் கூறிய கருத்தில் தவறு இல்லை என்றும் ஆனால் 

புள்ளி விபரத்தில் தவறு உள்ளது என்றும் கூறியுள்ளார். விஜய் கூறியது போல் 20% பேர் கருப்பு பணத்தை பதுக்கவில்லை என்றும், 5% பேர் மட்டுமே அதிகளவில் கருப்புப்பணத்தை பதுக்கியுள்ளனர் என்றும், அவர்கள் யார் என்று ஆட்சியாளர்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
 
உண்மையில் தா.பாண்டியன் கூறியதை போல் 20% பேர் இந்த தவறை செய்ததாக விஜய் கூறவில்லை. இந்தியாவில் 20% பேர் பணக்காரர்கள் இருப்பார்களா? அவர்களில் ஒருசிலர் செய்யும் தவறுக்காக ஏன் மீதியுள்ள 80% பேர் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்' என்றுதான் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஒரு சிலர் என்பதை தா.பாண்டியன் கூறிய 5% என்றும் வைத்து கொள்ளலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனியை பிசினஸ் தொடங்க விடாமல் தடுக்கும் விசாலாட்சி... அனல்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
திருமணம் செய்ய வயது மட்டும் போதாது.. நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம்! நடிகை பிரகதி ஓப்பன் பேச்சு!