விஜயின் அரசியல் என்ட்ரிக்கு வாழ்த்து கூறிய சூர்யா…! Etharkkum Thunindavan படப்பிடிப்பில் நடைபெற்ற ருசிகரம்!

By manimegalai aFirst Published Nov 10, 2021, 6:01 PM IST
Highlights

சூர்யா நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஜெய்பீம் படத்தை பார்த்து ரசித்தது குறித்தும் விஜய் பாராட்டியுள்ளார்.

சூர்யா நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஜெய்பீம் படத்தை பார்த்து ரசித்தது குறித்தும் விஜய் பாராட்டியுள்ளார்.

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் திரைத்துறையில் மீண்டும் கோலோச்சி வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், அடமழை போல் படங்களை எடுத்து குவிக்கத் தொடங்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரது படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது சன்பிக்சர்ஸ் நிறுவனம்.

இளம் வயதில் இருந்தே நண்பர்களான விஜய், சூர்யா அவ்வப்போது மட்டும் நேரில் சந்தித்துக்கொள்கிறார்கள். இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டும் என்பதும் அவர்களின் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இந்தநிலையில் இருவரையும் வைத்து ஒரே நேரத்தில் சன் பிக்சர்ஸ் படம் தயாரித்து வருவதும் ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் “எதற்கும் துணிந்தவன் | Etharkkum Thunindavan” படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன், மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் 2022 ஜனவரி மாதம் திரைக்கு வருவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றைய தினம் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக இயக்குனர் பாண்டிராஜ் டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்த கையோடு போஸ்ட் புரெடக்சன் வேலைகளும் தொடங்கிவிட்டனவாம்.

அதேபோல் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய காதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஜார்ஜியாவில் தொடங்கிய படப்பிடிப்பு பின்னர் டெல்லியில் நடைபெற்று, மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் மால் போன்று செட் அமைத்து பீஸ்ட் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் ரகசியங்கள் அடிக்கடி வெளியில் கசிவதால், அனைத்தையும் சீக்ரெட்டாக வைக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் விஜய் நடிக்கும் பீஸ்ட், சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு, சென்னை பெருங்குடியில் உள்ள சன் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நேற்றைய தினம், சன் ஸ்டூடியோவில் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பும், சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருந்தது. எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் பாடல் காட்சி ஒன்றின் விடுபட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. அதற்கும் அருகிலேயே விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இதனால் உணவு இடைவேளையின் போது நண்பர்களனா விஜய் – சூர்யா சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

உணவு இடைய்வேளையின் போது சூர்யாவின் படப்பிடிப்புத் தளத்திற்குத் திடீரென என்ட்ரி கொடுத்த விஜய்யைக் கண்டு, 'எதற்கும் துணிந்தவன்' யூனிட் இன்ப அதிர்ச்சி அடைந்தது. விஜய்யின் வருகையை முக மலர்ச்சியோடு வரவேற்ற நடிகர் சூர்யா, அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றதற்கு நடிகர் சூர்யா தமது வாழ்த்துகளை கூறியிருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் வெற்றி விஜய் அரசியல் வருகைக்கான அடித்தளம் என்றும் கூறப்படும் நிலையில் சூர்யாவின் வாழ்த்து விஜய் ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. அதேபோல் சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஜெய்பீம் படம் குறித்தும் விஜய் தமது வாழ்த்துகளை பரிமாரிக்கொண்டுள்ளார். இவர்களது சந்திப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரகசியமாக வைத்தாலும் அங்கு பணியில் இருந்த தொழில்நுட்பக் குழுவினர் இணையத்தில் கசியவிட்டுள்ளனர். விஜய் – சூர்யா சந்திப்பு செய்தியை சமூக வலைதளங்களில் கொண்டாடிவரும் அவரது ரசிகர்கள் இருவரது சந்திப்பு புகைப்படத்தை வெளியிடும்படியும் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

click me!