ரொம்ப நன்றிப்பா.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த மக்கள் இயக்க நிர்வாகிக்கு நன்றி சொன்ன நடிகர் விஜய்

By Raghupati RFirst Published Dec 8, 2023, 7:44 PM IST
Highlights

மிக்ஜாம் புயலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் உதவி செய்து வருகின்றனர்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயலின் பாதிப்பானது தமிழக வரலாற்றில் நிகழ்ந்த மிகவும் மோசமான இயற்கைப் பேரிடராகும். தமிழ்நாடு அரசு. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு, பாதிக்கப்பட்டோ காப்பாற்றி வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெள்ள நீர் வடிவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விஜய்‌ மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இலவசமாக பால் முட்டைகள் வழங்குவது, அன்னதானம் செய்வது என பொது சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Latest Videos

அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு இரவு நேர பாடசாலை, இலவச சட்ட ஆலோசனை மையம், விலையில்லா விருந்தகம் என ஒன்றன் பின் ஒன்றாக விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடங்கப்பட அதற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மிக்ஜாம் புயலையொட்டி நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள்  பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. 

இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். #கைகோர்ப்போம் துயர்துடைப்போம்” என்று வெளியிட்டிருந்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வரக்கூடிய பெருங்குடி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவருக்கு, நடிகர் விஜய் போன் செய்து அங்கே இருக்கும் பாதிப்புகள் மற்றும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விசாரித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா

click me!