பிஎம்டபிள்யு காரை விற்று விவசாயிகளுக்கு  நிதி கொடுத்த நடிகர் சுதீப்...!

First Published Dec 15, 2017, 4:18 PM IST
Highlights
actor sudeep help for agriculture people


கன்னட நடிகரான  சுதீப், தமிழில் இயக்குனர் ராஜமௌலி இயக்கி வெளியான 'நான் ஈ' படத்தில் வில்லனாக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சிம்புதேவன் இயக்கி வெளிவந்த புலி, பாகுபலி ஆகிய படங்களில் நடித்தார். 

கன்னட படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்த இவர் தமிழில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 'முடிஞ்சா இவன புடி’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தாலும், தொடர்ந்து தமிழில் கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் அழுத்தமான கதாபாத்திரத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் கிச்சா சுதீப் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒருவராக உள்ளார். இவர் பல கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும் ஒரு சில சமூக அக்கறை கொண்ட நிகழ்சிகளில் கலந்துக்கொண்டு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

ஏற்கெனவே கன்னட நடிகர், நடிகைகள் நலனுக்காக பல்வேறு நடடிக்கை எடுத்து வந்த இவர், தற்போது கன்னட விவசாயிகள் நலன் கருதி தன்னுடைய விலை உயர்ந்த BMW காரை விற்று உதவி உள்ளார்.

கர்நாடகாவில், விவசாயிகள் நலன் கருதி இயங்கும் தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இவர்... அங்கே பேசிய போது, விவசாயிகள் நலனுக்காக நடத்தப்பட்டு வரும் இந்த தொண்டு நிறுவனத்திற்கு தன்னுடைய வீட்டைக் கொடுப்பதாக அறிவித்தார்.

பின் தொடர்ந்து பேசிய இவர், நான் சினிமா துறையில் இருந்தாலும் மிகப் பெரிய அளவில் என்னிடம் எந்த சொத்தும் இல்லை என்று தெரிவித்தார். பின் விவசாயிகள் நலனுக்காக தான் பயன்படுத்தி வரும் BMW எக்ஸ் 6 மாடல் காரை விற்று அதில் வரும் பணத்தைத் தருவதாக தெரிவித்துள்ளார்.

click me!