பிரபல நடிகரின் பேரன் ஆரியன் அறிமுகமாகும் “கருத்துக்களை பதிவு செய்”

First Published Jan 24, 2018, 8:09 PM IST
Highlights
actor ssr grandson introduce karuthukkalai pathivu sei


ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்த RPM சினிமாஸ் அடுத்ததாக தயாரிக்க உள்ள திரைப்படம் “கருத்துக்களை பதிவு செய்”.

இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.

Latest Videos

கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர்.   இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான 'யா யா' படத்தை இயக்கியதுடன் விரைவில் வெளி வர உள்ள 'பாடம்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை இயகுகிறார் ராகுல். 

இந்த படம் பற்றி இயக்குனர் ராகுலிடம் கேட்ட போது...

இது இன்று நடந்து கொண்டிருக்கும் உண்மை கதை. சோஷியல் மீடியா என்றழைக்கப் படும் சமூக வலை தளங்களினால் தவறான பாதைக்குள் போகும் இன்றைய இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஆபத்துக்களை விவரிக்கும் படம் தான் 'கருத்துக்களை பதிவு செய்'..

படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஒரே கட்டத்தில் நடைபெற்று, ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இன்றைய கால கட்டத்திற்கு அவசியமான படமாக இது இருக்கும் என்றார் இயக்குனர் ராகுல்.
 

click me!