நில மோசடி வழக்கு... நடிகர் சூரிக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Dec 07, 2020, 08:25 PM ISTUpdated : Dec 07, 2020, 08:27 PM IST
நில மோசடி வழக்கு... நடிகர் சூரிக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு...!

சுருக்கம்

அதை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால், அதுசம்பந்தமாக விசாரிக்க போலீசார் தயாராக இருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த “வீரதீர சூரன்” என்ற திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார். இதற்காக வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மற்றும் விஷ்ணு விஷால் தந்தையுமான, ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர். 

அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து ரூ.2.70 கோடியை கூடுதலாக பெற்று மோசடி செய்து விட்டதாக காவல்துறையில் நடிகர் சூரி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ரமேஷ் குடவலா, மற்றும் அன்புவேல்  ராஜன் மீது பதிவான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

இந்த வழக்கில்  முன் ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு,  கடந்த முறை நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தன்னுடைய முன் ஜாமின் மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக ரமேஷ் குடவாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, ரமேஷ் குடவாலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

 

இந்த வழக்கில் அன்புராஜன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. நீதிபதி சரவீந்திரன் முன்பு ஆஜரான காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அடையாறு போலீசார் முறையாக விசாரித்து வருவதாகக் கூறி, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். நடிகர் சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நில மோசடி தொடர்பாக முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலாவின் ஆடியோ பதிவு மற்றும் ஆதாரங்களை வைத்திருப்பதாகக் கூறினார்

இதையும் படிங்க: சினேகா வீட்டில் நடந்த விசேஷம்... குட்டி பாப்பாவுடன் வெளியான க்யூட் குடும்ப போட்டோஸ்...!

அதை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால், அதுசம்பந்தமாக விசாரிக்க போலீசார் தயாராக இருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.  இதை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சூரியிடம் உள்ள ஆதாரங்களை அடையாறு போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணைக்கு ஒத்துழைக்கக் கூறி, விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!