அறிக்கை எல்லாம் இல்ல ஆக்‌ஷனில் இறங்கிய டி.ராஜேந்தர்... வி.பி.எஃப் கட்டணத்துக்கு எதிராக அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 7, 2020, 7:58 PM IST
Highlights

இந்நிலையில் டி.ராஜேந்தர் தலைமையில் இன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது அதிருப்தியில் இருந்த பாரதிராஜா தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கத்தை சமீபத்தில் ஆரம்பித்தார். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தோற்றதால் கடுப்பில் இருந்த இயக்குநர் டி.ராஜேந்தர் இன்று தனது தலையில் புதிய சங்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கு தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் அதனை தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் என அழைக்கின்றனர்.

அந்த சங்கத்தின் அறிமுக விழா இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் தலைவராக டி.ராஜேந்தர், செயலாளர்களாக  என்.சுபாஷ் சந்திர போஸ்  மற்றும் JSK.சதீஷ் குமார், பொருளாளராக கே.ராஜன். துணைத்தலைவர்களாக பி.டி.செல்வ குமார், சிங்கார வடிவேலன், கே.ஜி.பாண்டியன், இணை செயலாளர்களாக அசோக் சாம்ராஜ், சிகரம் சந்திரசேகர் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.


சங்க அறிமுக விழாவில்  VPF போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவீனங்களை தவிர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க உறுதுணையாக இருப்போம். திரையரங்குகளில் வெளியிட முடியாமல், சிக்கி தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களை திரையிடுவதற்கு வழிகாட்டுவோம்,  F.M.S, சாட்டிலைட், O.T.T. மற்றும் கேபிள் டி.வி வியாபாரத்தை பெருக்கி லாபம் பெருக முயற்சி மேற்கொள்வோம்,  பட வெளியீட்டின் போது ஏற்படும் பல வித சிக்கல்களை, இயன்றவரை சுமுகமாக பேசி தீர்க்க ஆவண செய்வோம் என 5 விஷயங்களையும் டி.ராஜேந்தர் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் டி.ராஜேந்தர் தலைமையில் இன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், க்யூப் மற்றும் சர்வீஸ் புரொவைடர் நிறுவனங்களுடன் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பல விதங்களில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு அவர்கள் செவி சாய்க்காத காரணத்தாலும் வேறு சில காரணங்களைச் சொல்லிக் காலம் தாழ்த்திக் கொண்டே இருப்பதாலும், க்யூப் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து ஒருவார காலத்திற்குள் எங்களுக்குரிய பதிலை தராவிடில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்துவோம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

click me!