கொரோனாவை எதிர்த்து போராட வேண்டிய நேரம் இது..! டெல்லி போராட்டம் பற்றி சரத்குமார் கருத்து!

Published : Apr 02, 2020, 03:18 PM IST
கொரோனாவை எதிர்த்து போராட வேண்டிய நேரம் இது..! டெல்லி போராட்டம் பற்றி சரத்குமார் கருத்து!

சுருக்கம்

கொரோனா பீதி பற்றி எரியும் நிலையில், கடந்த மாதம் மார்ச் 13 முதல் 15 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மத சம்பந்தமான மாநாட்டில் தமிழகத்தில் மொத்தம் 1130 பேர் கலந்து கொண்டனர்.  

கொரோனா பீதி பற்றி எரியும் நிலையில், கடந்த மாதம் மார்ச் 13 முதல் 15 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மத சம்பந்தமான மாநாட்டில் தமிழகத்தில் மொத்தம் 1130 பேர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என, சுகாதாரத்துறை தொடர்ந்து, பரிசோதித்து வருகிறது. 

டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே சோதனை முடிந்துள்ளதாகவும், மற்றவர்கள் சோதனைக்கு ஒத்துழைக்காததாலும், தலைமறைவாக உள்ளதாலும், அவர்களை பரிசோதிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியவர்கள் பற்றி, நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்... "டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் மீது மத துவேஷங்களுக்கு இடமளிக்க வேண்டாம். சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டிய தருணம் இது.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!