பிரதமர் மோடியை சந்தித்து பேசிய புகைப்படத்தை திடீர் என வெளியிட்ட மாதவன்! அட இவரும் இருக்காரே..

By manimegalai aFirst Published Apr 5, 2021, 7:27 PM IST
Highlights

இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன், மற்றும் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துள்ள நடிகர் மாதவன் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்த புகைப்படங்களை நடிகர் மாதவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 

இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன், மற்றும் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துள்ள நடிகர் மாதவன் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்த புகைப்படங்களை நடிகர் மாதவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றியவர் நம்பி நாராயணன். மிகவும் சவால் நிறைந்த இவரது வாழ்க்கை படத்தை தயாரித்து நடிக்கிறார் நடிகர் மாதவன். 'ராக்கெட்ரி நம்பி விளைவு' என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், மலையாளம், என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.  சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா மாதவனை பேட்டி எடுக்கும் ஒரு காட்சியும் நம்பி நாராயணன் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் விரிவாக ட்ரெய்லரில் கட்டப்பட்டிருந்தது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் ஆராய்ச்சிக்காக முதன்மையாக செயல்பட்டவர் நம்பி நாராயணன். 1994 ஆம் ஆண்டு பாதுகாப்பு ரகசியங்களை உளவு பார்த்ததாக மத்திய புலனாய்வுத்துறை இவரை தவறுதலாக கைது செய்தது. இதன் பின்னர் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின் உச்சநீதிமன்றம் இவரை நிரபராதி என விடுவித்தது. இந்த நான்கு ஆண்டுகளில் அவர் பட்ட மன உளைச்சல்கள், பாதிப்புகளை Ready to fire: How India and I survived the ISRO spy case என்கிற புத்தகத்தின் மூலம் வெளியுலகத்திற்கு எடுத்து கூறி இருந்தார்.

பின்னர் கேரளாவில் சட்டத்துக்கு புறம்பாக கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானதாகவும் திருவனந்தபுரம் சார்பில் நீதி மன்றத்தில் நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் சமரசம் செய்துகொள்ள ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கேட்டிருந்தார். அதில் இவருக்கு சாதகமாகவே தீர்ப்பும் வந்தது.

இந்நிலையில் இந்த ரியல் ஹீரோவின் வாழ்க்கையை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக படமும் தயாராகியுள்ளது. விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில்,  நம்பி நாராயணன் மற்றும் நகர் மாதவன் ஆகியோர் மோடியை சந்தித்து பேசியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சந்திப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது நடிகர் மாதவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!