
நடிகரும், தயாரிப்பாளருமான குமாரராஜன் என்பவர் அவரது வீட்டில் திடீர் என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் குடும்பத்தினர்... குமாரராஜாவின் மரணத்திற்காக உண்மை காரணத்தை வெளியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்: கவர்ச்சி உடையில் அந்தரத்தில் தலைகீழாக தொங்கி அதிரவைத்த சமந்தா..! வாயடைத்து போன ரசிகர்கள்!
தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு, பாலு ஆனந்த் என்பவர் இயக்கத்தில் 'சந்தித்ததும் சிந்தித்ததும்' என்ற படத்தை தயாரித்து, நடித்தவர் குமாரராஜன். இந்த படத்தில் இவரது காமெடி காட்சிகள் பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில், நடிகர் கொட்டாச்சி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இவர் நாமக்கல்லில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பரவிய தகவல், தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிப்பு, தயாரிப்பை தாண்டி லாரிகளுக்கு பாடி கட்டும் பட்டறை ஒன்றையும் பெரிய அளவில் நடத்தி வந்தார் குமார ராஜா. இந்நிலையில் இவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பரவிய தகவல் வதந்தி எனவும், மாரடைப்பு காரணமாகவே குமாரராஜா இறந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்: என் பரம்பரையிலேயே நான் தான் முதல் முறையாக இதை செய்திருக்கேன்... ஆனந்த கண்ணீர் வடித்த ஜிபி முத்து...!
'சந்தித்ததும் சிந்தித்ததும்' படத்தைத் தொடர்ந்து தற்போது 'துப்பார்க்கு துப்பாய', 'ரெண்டுல ஒண்ணு' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் இவரது மரணம், குடும்பத்தினர் மற்றும், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.