கந்துவட்டிக்காரருடன் சேர்ந்து கொலைமிரட்டல் விடுத்த விவகாரம்! அறிக்கையின் மூலம் பதில் கொடுத்த கருணாகரன்!

By manimegalai aFirst Published Feb 11, 2019, 7:10 PM IST
Highlights

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்ற 'பொதுநலன் கருதி' திரைப்படத்தின் இயக்குனர் சீயோன், ஆடியோ விழாவில் கலந்து கொள்ளாத, நடிகர் கருணாகரன் பற்றி விமர்சித்து பேசியதற்காக, நடிகர் கருணாகரன், தனக்கும், இணை தயாரிப்பாளருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
 

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்ற 'பொதுநலன் கருதி' திரைப்படத்தின் இயக்குனர் சீயோன், ஆடியோ விழாவில் கலந்து கொள்ளாத, நடிகர் கருணாகரன் பற்றி விமர்சித்து பேசியதற்காக, நடிகர் கருணாகரன், தனக்கும், இணை தயாரிப்பாளருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இந்த புகாருக்கு, விளக்கம் கொடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது... 

"அன்பார்ந்த ஊடக நண்பர்களுக்கும், இயக்குனர்களுக்கும், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், பணிவான வணக்கங்கள். முதலில் "பொதுநலன் கருதி" திரைப்பட இயக்குனர் சீயோன் மற்றும் அதன் இணை தயாரிப்பாளர் என்னை பற்றி சொல்லும் குற்றச்சாட்டுகள் முழுவதுமே உண்மை இல்லை.

படத்தின் ஆடியோ ரிலீஸ் பிப்ரவரி 4ஆம் தேதியன்று சொல்லி என்னை அழைத்தது,  பிப்ரவரி 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இரவு சுமார் 9 மணியளவில் தான். கால அவகாசம் குறைவாக இருந்ததால் முன்னதாக ஒத்துக்கொண்ட பணிகளை ஒதுக்கி வைக்க முடியவில்லை.

இவற்றையெல்லாம் தெளிவாக இயக்குனரிடமும், இணை தயாரிப்பாளரிடமும், கூறியிருந்தேன் படப்பிடிப்பு பணிகள் முடிந்து நான் சென்னைக்கு வந்ததே பிப்ரவரி 8 ஆம் தேதி தான். நான் ஏதோ வேண்டுமென்றே ஆடியோ ரிலீசுக்கு வரவில்லை என்று அவர்கள் என் மீது குறை சொல்கிறார்கள்.  அது உண்மை இல்லை.  செலிபிரிட்டி ஷோ முடிந்து அவர்கள் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் வழியில் என்னால் அனுப்பப்பட்ட, மர்மநபர்கள் நீ எப்படி கருணாகரனை குறை சொல்ல என தாக்க முயற்சித்தனர் என்றும் படத்தின் டீஸர் வெளியான நவம்பர் 27 அன்று கந்துவட்டி கும்பல் இயக்குனருக்கு தொலைபேசியில் மிரட்டியதாகவும் பிப்ரவரி 9 அன்று புகார் கொடுத்ததாகவும் கூறுகின்றனர்.

இவை தொடர்பாக நான் தெரிவிக்க விரும்புவது எனக்கும் கந்துவட்டிகாரர்களுக்கும் எந்த தொடர்பு எதுவும் இல்லை.  ஏனெனில் நான் அப்படி வளரவில்லை.  எனது தந்தை காளிதாஸ் தேசபக்தன் தேசத்தின் பாதுகாப்பிற்காக உழைக்கும்,  மத்திய அரசின் முக்கிய துறையில் பணியாற்றி விருது பெற்றவர்.  இவர்கள் குறிப்பிட்டு இருப்பது போன்ற வழிகளில் நான் வளர்க்கப்படவில்லை. நான் நடித்த படம் நன்றாக ஓட வேண்டும் என்றுதான் ஒவ்வொரு நடிகரும் விரும்புவார்கள்.  உயிரை பணயம் வைத்து நான் இந்த படத்தில் சில காட்சிகள் நடித்திருக்கிறேன்.  

கந்துவட்டிக்காரர்கள் உடன் நான் சேர்ந்து படத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறுவதில் எள்ளளவும் உண்மை இல்லை கடனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு புயல் வெள்ளத்தால்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்திருக்கும் என்னை கந்துவட்டி கும்பலுடன் தொடர்பு படுத்தி பேசுவது வேதனையளிக்கிறது.  எனக்கும் சமூக உணர்வு இருக்கிறது கந்துவட்டிக்காரர்கள் உடன் சேர்ந்து கொண்டு வன்முறையை நம்பி வாழும் தேவை இல்லை. அப்படி பட்டவன் நான் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

குறும்படங்களின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த நான்,  புதுமுக இயக்குனர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டேனா? என கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் "பொதுநலன் கருதி"  திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள். 

 நன்றி என கருணாகரன் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார். 

click me!