கோலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டை டார்கெட் செய்யும் கொரோனா... நடிகர் சிரஞ்சீவிக்கு தொற்று பாதிப்பு உறுதி

By Ganesh PerumalFirst Published Jan 26, 2022, 10:40 AM IST
Highlights

லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் சிரஞ்சீவி. 

கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால், திரையுலகம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. பொங்கலுக்கு ரிலீசாவதாக இருந்த வலிமை, ராதே ஷ்யாம், ஆர்.ஆர்.ஆர் என அடுத்தடுத்து படங்களின் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், சமீப காலமாக திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.

கடந்த மாதம் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று மீண்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் அருண் விஜய், சதய்ராஜ், விஷ்ணு விஷால் ஆகியோரும், நடிகைகள் மீனா, குஷ்பு, திரிஷா, ஷெரின் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பெற்று மீண்டனர்.

இதுவரை தமிழ் நடிகர்களை தொடர்ந்து தாக்கி வந்த கொரோனா தற்போது டோலிவுட் பக்கம் சென்றுள்ளது. அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் மகேஷ் பாபுவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது நடிகர் சிரஞ்சீவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். 

லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் சிரஞ்சீவி. மேலும் கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

click me!