
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிவா. சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற படங்களை இயக்கியுள்ள இவருக்கு பாலா என்கிற தம்பி உள்ளார். இவர் வீரம் படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்திருந்தார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு அம்ரிதா சுரேஷ் என்கிற பாடகியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இத்தம்பதி கடந்த ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டார் பாலா. அவரின் முன்னாள் மனைவியான அம்ரிதா சுரேஷ், தற்போது பிரபல இசையமைப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
அவரும் மலையாள இசையமைப்பாளரான கோபி சுந்தரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இசையமைப்பாளர் கோபி சுந்தர், கடந்த 2010-ம் ஆண்டே தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இதன்பின்னர் பின்னணி பாடகி அபயா என்பவருடன் லிவ்விங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், தற்போது அவர் நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி அம்ரிதா சுரேஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், அவர்களுக்கு இடையே புதிய உறவு மலர்ந்துள்ளதை சூசகமாக உறுதிப்படுத்தி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்களும், நண்பர்களும் அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் கோபி சுந்தர் தமிழில் தோழா, பெங்களூரு நாட்கள் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... டான் சக்சஸுக்கு பின் டாப் கியரில் செல்லும் சிவகார்த்திகேயன்... SK 22-வில் பிரபல பாலிவுட் நடிகையுடன் கூட்டணி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.