Vijayakanth: இனி அதிரடி.. சரவெடி தான்! கேப்டனின் சினிமாவில் என்ட்ரி கன்பாம்! வேற லெவலில் வரவேற்கும் ரசிகர்கள்!

By manimegalai aFirst Published Dec 13, 2021, 5:29 PM IST
Highlights

நடிகர் விஜயகாந்த் (vijayakanth) நீண்ட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் சில தினங்களாகவே சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வந்த நிலையில், இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் கேப்டனை வேற லெவலுக்கு வரவேற்க்க தயாராகி வருகிறார்கள் விஜயகாந்த் ரசிகர்கள்.

நடிகர் விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் சில தினங்களாகவே சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வந்த நிலையில், இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் கேப்டனை வேற லெவலுக்கு வரவேற்க்க தயாராகி வருகிறார்கள் விஜயகாந்த் ரசிகர்கள்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ஹீரோவாக நடித்து கடைசியாக 'எங்கள் ஆசான்' படம் வெளியானது. இதை தொடர்ந்து தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வந்ததால், அவரால் மற்ற படங்களில் நடிக்க முடியாமல் போனது.  பின்னர் மகன் சண்முக பாண்டியன் நடித்த ’சகாப்தம்’ என்ற திரைப்படத்தில்  சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதை தொடர்த்து மீண்டும் மகனுடன் 'தமிழன் என்று சொல்லடா ' என்கிற படத்தில் நடிப்பார் என தகவல் வெளியான நிலையில், அந்த படத்தின் பணிகள் அப்படியே கை விடப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்துக்கு, கடந்த 2014ம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, திடீர் என உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் எடுத்த பின்னரும், அவரது உடல் நிலை மோசமாகிக்கொண்டே சென்றதால், மனைவி, பிரேமலதா, மற்றும் மகன்களுடன் சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்தார். இதில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

தற்போது சீரான உடல்நிலையுடன் விஜயகாந்த் இருந்தாலும், அவ்வப்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மாதாந்திர உடல் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். மேலும் சமீபத்தில் கூட துபாய்க்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். எனவே முன்பை விட, நன்கு உடல் நலம் தேறியுள்ள விஜயகாந்த் விரைவில் ஒரு படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற திரைப்படத்தில் தான் விஜயகாந்தை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த தகவல் வெளியான போதே விஜயகாந்த் ரசிகர்கள் உச்சாகம் அடைந்த நிலையில், தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கேப்டனை வரவேற்க வேறு லெவலுக்கு தயாராகி வருகிறார்கள். மேலும் விரைவில் இதுகுறித்து அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கின்றனர். விஜயகாந்த் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தீயாக பரவி வருகிறது.

 

click me!