
நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி அளித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் ஆனந்த்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.
அந்த பேட்டியில், "நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது. திரைப்பட நடிகர்கள் கட்சித் தலைவர்களானால் நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும்.
கமல் தொடங்கும் கட்சியில் நான் ஒருபோதும் சேரமாட்டேன். நடிகர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரசியலுக்கு வரக் கூடாது" என்று பிரகாஷ் ராஜ் அவர் கூறியிருந்தார்.
இவரின் இந்தக் கருத்க்கு சினிமா துறையைச் சார்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபற்றி கருத்துத் தெரிவித்த நடிகர் ஆனந்தராஜ் “பிரகாஷ்ராஜ் கன்னட நடிகர்களைப் பற்றி சொல்கிறாரா? அல்லது தமிழ்நாட்டு நடிகர்கள் பற்றி பேசுகிறாரா? எனத் தெரியவில்லை.
அண்ணா முதல் அம்மா வரை எல்லோரும் கலைத் துறையை சேர்ந்தவர்கள்தான். மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறவர்கள் எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்“ என்று ஒரே போடாக போட்டார் நடிகர் ஆனந்தராஜ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.