கலாச்சார விழாவில்.... 20 வருடம் கழித்து எலிசபெத் ராணியை சந்தித்த கமல்....

 
Published : Mar 01, 2017, 11:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
கலாச்சார விழாவில்.... 20 வருடம் கழித்து எலிசபெத் ராணியை சந்தித்த கமல்....

சுருக்கம்

20 years back kamal meet elisabath rani

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா நேற்று மாலை லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெற்றது.

இங்கிலாந்து ராணி எலிசபெத் துவக்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் முக்கிய விருந்தினர்களில் ஒருவராக உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து கமல்ஹாசன் கூறுகையில்....  பிரதமர் மோடி தனது பெயரை இந்த கலாச்சார விழாவிற்கு  முன்மொழிந்ததை மிகப் பெரும் கவுரவமாகக்  கருதுகிறேன் என்றும்.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான வரலாற்றை, கலாச்சார விழாவாக கொண்டாடும் இந்த தருணம்  மிகச்சிறந்தது. இந்தியாவில் உள்ள பல மொழிகளை இணைக்கும் பாலமாக ஆங்கிலம் இருப்பது சிறப்பான ஒன்று என்று கமல்ஹாசன் கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மருதநாயகம்' தொடக்கவிழா நடந்து சரியாக 20 வருடம் ஆகியுள்ள நிலையில் மீண்டும் இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொள்ளும் விழாவில் கமல் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரிலீஸ் ஆனபோது யாரும் பார்க்கல, இப்போ புகழ்கிறார்கள்'; கமல் படம் பற்றி ஆதங்கப்பட்ட ஸ்ருதிஹாசன்
ஜனநாயகன் ஆடியோ லாஞ்சுக்கு இத்தனை கட்டுப்பாடுகளா? விஜய்க்கு செக் வைத்த மலேசியா அரசு..!