எஸ்.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்கு ஹேப்பி நியூஸ்.! வெளியானது சூப்பர் அறிவிப்பு

By Raghupati RFirst Published Oct 8, 2022, 8:04 PM IST
Highlights

எஸ்.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்கு சூப்பர் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது.

இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான B பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் Combined Graduate Level Examination (CGLE) போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதையும் படிங்க..போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.! குடிமைப் பணிகளுக்கு இலவச பயிற்சி - எவ்வாறு விண்ணப்பிப்பது ?

இவற்றில் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்கள் மத்திய அரசின் தலைமை செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, இரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றிற்கும், ஆய்வாளர் பணியிடங்கள் (Inspector) மத்திய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics ஆகியவற்றிலும் மற்றும் உதவியாளர், கண்காணிப்பாளர் (Assistant Superintendent) பணியிடங்கள் மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

C பிரிவு பணிகள் 12 ஆம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் Combined Higher Secondary Level (CHSL) தேர்வு மூலம் மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு (Lower Division Clerks) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 இப்பொதுப்பணிகள் தவிர Junior Engineer தேர்வு, Stenographer தேர்வு, Sub Inspector in Delhi Police, Central Armed Police Force (CAPF) and Central Industrial Security Force (CIF) தேர்வுகளும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

இதையும் படிங்க..தேசிய திறனாய்வு தேர்வு நிறுத்தம்.. என்சிஇஆர்டி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - முழு விபரம்

டிசம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் முடங்கியுள்ளது என்றும், விண்ணப்ப தேதிக்கான காலக்கெடுவை மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதில், ‘தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 5 நாட்கள் காலக்கெடு நீட்டிக்க செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக பணியாளர் தேர்வாணைய இணையதள சர்வர் கோளாறால் விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் இன்னலுக்கு உள்ளாகிய நிலையில் 13.10.2022 வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..TNTET 2022: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதி வெளியானது.. தேர்வு குறித்த முழு விபரம் உள்ளே.!!

click me!