12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி - அசத்தல் அறிவிப்பு !

By Raghupati RFirst Published Oct 30, 2022, 8:30 PM IST
Highlights

தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி வழங்க பள்ளி கல்வி இயக்குநரகம் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 அல்லது 2022 ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டத்தை வழங்குகின்றனர்.

Internship பயிற்சியின்போது 7வது மாதம் முதல், மாதம்தோறும் ரூபாய் 10,000/- உதவித்தொகையைப் பெறலாம். பணியில் சேர்ந்தவுடனே துவக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூபாய் 1.70 லட்சம் முதல் 2.20 லட்சம் வரை வழங்கப்படும் (பணிநிலைக்கு ஏற்றாற்போல்).

இதையும் படிங்க..கொட்டிக்கிடக்கும் அரசு வேலை.. 8ம் வகுப்பு படித்தாலே போதும்.. முழு தகவல்கள் இதோ

HCL Technologies – ல் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியைத் துவங்குவதற்கு BITS Pilani, Amity மற்றும் SASTRA பல்கலைக்கழகங்களில் வாய்ப்பை பெற்றுத் தருகின்றது. மேலும் அவர்களின் கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை HCL Technologies நிறுவனம் வழங்குகின்றது.

இதன் மூலம் மென்பொருள் வடிவமைப்பு, அனலிஸ்ட், டிசன் என்ஜீனியர், டேடா என்ஜீனியர், சம்போர்ட் மற்றும் பாரஸ்சஸ் அசோசேட், சர்வீஸ் டெஸ்க் மற்றும் டிபிஒ பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிரிவில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – 88079 40948. மதுரை – 9788156509. திருநெல்வேலி – 98941 52160. திருச்சி – 94441 51303. கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர்– 89032 45731, 98655 35909’ என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..மாதம் 30 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை.. யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம் ? முழு விபரம் இதோ

இதையும் படிங்க..டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

click me!