ஆவினில் அருமையான வேலை.. ரூ.43,000 வரை சம்பளம்.. நாளை தான் கடைசி.. முழு விவரம்..

By Thanalakshmi VFirst Published Aug 11, 2022, 5:16 PM IST
Highlights

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில் (Aavin) கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில் (Aavin) கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

பணியின் பெயர் 

தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ள பதவியின் பெயர் தமிழ்நாடு கால்நடை ஆலோசகர்.

காலி பணியிடங்கள்

மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் நாளை நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டும்.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.V.Sc & AH படித்திருக்க வேண்டும். உடன் கணினி அறிவு இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம்:

இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.43,000/- வரை சம்பளமாக கொடுக்கப்படும்

மேலும் படிக்க:IRCTC யில் சூப்பர் வேலை... ரூ. 30,000 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை.. விண்ணப்பிப்பது எப்படி..?

click me!