ஜூலை 31-க்கு பிறகு ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா? மத்திய வருவாய் செயலாளர் பதில்..

Published : Jul 17, 2023, 11:03 AM IST
ஜூலை 31-க்கு பிறகு ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா? மத்திய வருவாய் செயலாளர் பதில்..

சுருக்கம்

ஜூலை 31, 2023க்கு பிறகு வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்கலாம் என்று கடைசி நாள் வரை பலர் காத்திருக்கலாம்.

2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31 ஆகும். அதற்கு இன்னும் 14 நாட்களே உள்ளது. ஜூலை 31, 2023க்கு பிறகு வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்கலாம் என்று கடைசி நாள் வரை பலர் காத்திருக்கலாம். ஆனால் ஜூலை 31-க்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான திட்டம் இல்லை என்று மத்திய வருவாய் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வரி செலுத்துவோர் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் உரிய நேரத்தில் கணக்கு தாக்கல் செய்யுமாறு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலம் வருமான வரித்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஜூலை 31 காலக்கெடுவை நீட்டிக்க நிதி அமைச்சகம் பரிசீலிக்காததால், வருமான வரி செலுத்துவோர் விரைவில் கணக்கு தாக்கல் செய்யுமாறு வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "கடந்த ஆண்டை விட தாக்கல் அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்… இது கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய "கடந்த ஆண்டை விட வருமான வரி தாக்கல் மிக வேகமாக இருப்பதால் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம், மேலும் கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் மேலும் எந்த நீட்டிப்புகளையும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம். எனவே, ஜூலை 31-ம் தேதிக்கான காலக்கெடு விரைவில் நெருங்கி வருவதால், தங்கள் வரிக் கணக்கை விரைவாக தாக்கல் செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.

வரி திரட்டல் இலக்கு குறித்து பேசிய அவர் , "இது 10.5 சதவீதமாக இருக்கும் இலக்கு வளர்ச்சி விகிதத்திற்கு ஏற்ப அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளது. ஜிஎஸ்டியை பொறுத்தவரை வளர்ச்சி விகிதம் இதுவரை 12 சதவீதமாக உள்ளது. இருப்பினும், விகிதக் குறைப்பு காரணமாக உற்பத்தி வரியில் வளர்ச்சி விகிதம் 12 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. "இது இப்போது எதிர்மறையாக உள்ளது. வரி விகிதங்கள் குறைவதன் தாக்கம் முடிந்தவுடன், உற்பத்தி வரிகளின் வசூலில் சில அதிகரிப்பைக் காண்போம் என்று நம்புகிறோம். எனவே, ஒட்டுமொத்தமாக இது இன்னும் ஆரம்ப நாட்கள் என்று நாங்கள் உணர்கிறோம். நாம் இலக்கை அடைய முடியும்," என்று அவர் குறிப்பிட்டார்.

நடப்பு நிதியாண்டில் ரூ. 33.61 லட்சம் கோடி மொத்த வரி வருவாய் இருக்கும் என்று மத்திய பட்ஜெட்டில் அரசாங்கம் கணித்துள்ளது. இதில், கார்ப்பரேட் மற்றும் தனிநபர் வருமான வரி வசூலிப்பதை விட, 10.5 சதவீதம் அதிகமாக, 18.23 லட்சம் கோடியை திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2023க்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் சுங்க வரி வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூ.2.10 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.33 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 12 சதவீதம் அதிகரித்து ரூ.9.56 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கிறாரா? அரசியல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத் பவார்!

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்