பட்ஜெட் 2025: நிர்மலா சீதாராமன் படைக்க இருக்கும் புதிய சாதனை என்ன?

Published : Jan 27, 2025, 04:11 PM IST
பட்ஜெட் 2025: நிர்மலா சீதாராமன் படைக்க இருக்கும் புதிய சாதனை என்ன?

சுருக்கம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எட்டாவது மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்கிறார். இதன் மூலம் தொடர்ச்சியாக எட்டு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையைப் பெறுவார். மொரார்ஜி தேசாய் 10 பட்ஜெட்டுகளையும், பி.சிதம்பரம் 9 பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்துள்ளனர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது எட்டாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதில் ஒன்று இடைக்கால பட்ஜெட்டும் அடங்கும். இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சியில்  இரண்டாவது பட்ஜெட்டாகும்.

 இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக ஜூலை 2019 -ல் நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். அதே ஆண்டு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பின்னர் பிப்ரவரி 2024-ல் ஒரு இடைக்கால பட்ஜெட்டுடன் தொடர்ச்சியாக ஏழு பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்துள்ளார்.

அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் யார்?
இந்தியாவின் நிதியமைச்சராக மொரார்ஜி தேசாய் 1959 முதல் 1963 வரையிலும், மீண்டும் 1967 முதல் 1969 வரையிலும் பணியாற்றினார். இவர் தான் இதுவரை அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த சாதனையை படைத்துள்ளார். இரண்டு இடைக்கால பட்ஜெட்டுகளுடன் மொத்தம் 10 பட்ஜெட்டுகள்தாக்கல் செய்துள்ளார். 

பட்ஜெட் 2025 : 4 அரசு திட்டங்களுக்கு அடிக்கப் போகிறது ஜாக்பாட்!!

மொரார்ஜி தேசாய்

மொரார்ஜி தேசாய் தனது முதல் பட்ஜெட்டை பிப்ரவரி 28, 1959 அன்று தாக்கல் செய்தார், அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முழு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்தார். பின்னர் 1962 இல் ஒரு இடைக்கால பட்ஜெட் வந்தது. அதைத் தொடர்ந்து இரண்டு முழு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1967-ல் மற்றொரு இடைக்கால பட்ஜெட்டையும், அதைத் தொடர்ந்து 1967, 1968 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் மூன்று முழு பட்ஜெட்டுகளையும் தொடர்ந்து தாக்கல் செய்தார். இதன் மூலம் மொத்தம் 10 ஆக உயர்ந்தது.

மொரார்ஜி தேசாய் நிர்மலா சீதாராமனிடம், அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் யார் என்பது பற்றிய ஒரு பார்வை நிர்மலா சீதாராமன் எட்டு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த பிரணாப் முகர்ஜியின் சாதனையை முறியடிக்க உள்ளார்.

ப. சிதம்பரம்:

மொத்தம் ஒன்பது பட்ஜெட்டுகளுடன் இரண்டாவது அதிகபட்ச யூனியன் பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த சாதனையை பி. சிதம்பரம் வைத்திருக்கிறார். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போது 1996 ஆம் ஆண்டு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 1997-ல் மற்றொரு பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கீழ் 2004 மற்றும் 2008-க்கு இடையில் அவர் தொடர்ச்சியாக ஐந்து பட்ஜெட்டுகளையும், 2013 மற்றும் 2014-ல் இரண்டு பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் மொத்தம் ஒன்பது பட்ஜெட்களை தாக்கல் செய்து இருக்கிறார். 

மத்திய பட்ஜெட் 2025: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன?

பிரணாப் முகர்ஜி:

மறைந்த குடியரசுத் தலைவரும், மன்மோகன் சிங் அரசில் நிதியமைச்சராகவும் இருந்த பிரணாப் முகர்ஜி1980களின் முற்பகுதியில் மூன்று பட்ஜெட்டுகளையும், 2009 முதல் 2012 வரை தொடர்ச்சியாக ஐந்து பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்தார். இவரது சாதனையை வரவிருக்கும் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் முறியடிப்பார். மொத்தம் எட்டு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த பிரணாப் முகர்ஜியின் சாதனையும் இந்த பட்ஜெட்டில் முறியடிக்கப்படும்.

தொடர்ந்து அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் யார்?
நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தொடர்ச்சியாக எட்டு மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை பெறுவார். ஜூலை 23, 2024 அன்று, தொடர்ச்சியாக ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்த மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடித்து இருந்தார். 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?