
Sensex cracks 1,500 pts :வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் அதாள பாதாளத்தில் சரிந்துள்ளன. சர்வதேச சூழல் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகசந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
என்ன காரணம்
அமெரிக்காவில் மே மாதம் பணவீக்கம் எதிர்பார்த்த அளவான 8.3 சதவீதத்தைவிட அதிகரித்து 8.6 சதவீதாக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை கடுமையாக உயர்த்தும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 50 புள்ளிகள் முதல் 75 புள்ளிகள் உயர்த்தலாம் எனத் தெரிகிறது.
இந்திய பங்குச்சந்தையிலிருந்து ஏற்கெனவே அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேறி வரும் நிலையில் இந்த செய்தி அவர்களை மேலும் பதற்றமடையச் செய்தது. இதனால் இன்று காலைபங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கினர். இதனால் தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியியும், மும்பைப் பங்குச்சந்தையிலும் சென்செக்ஸும் பெரும் வீழ்ச்சி அடையத் தொடங்கியது.
ஆசியப் பங்குச்சந்தையிலும் காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சரிவு காணப்பட்டது.ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் சந்தையிலும் காலையிலிருந்து வர்த்தகம் மந்தமாகவே நடக்கிறது. சீனாவில் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படாததும் பெரிதும் முதலீட்டாளர்களை கவலையி்ல் ஆழ்த்தியது.
படுமோசமான வீழ்ச்சி
இதனால் பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சரிவு காணப்பட்டது. மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1500 புள்ளிகள் சரிந்து, 52,801 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 422 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 15,799 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது
30 பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் சன்ஃபார்மா, பவர்கிரிட் நிறுவனபங்குகளைத் தவிர அனைத்து நிறுவனப் பங்குகளும் சரிவில் உள்ளன. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியில் அனைத்து துறைப் பங்குகளும்இழப்பில் உள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.