Share Market Today: பங்குச்சந்தையில் கொண்டாட்ட மனநிலை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வரலாற்று உயர்வு

Published : Dec 01, 2022, 09:55 AM ISTUpdated : Dec 01, 2022, 09:56 AM IST
Share Market Today: பங்குச்சந்தையில் கொண்டாட்ட மனநிலை! சென்செக்ஸ், நிப்டி  புள்ளிகள் வரலாற்று உயர்வு

சுருக்கம்

மும்பை, தேசிய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 7வது நாளாக உயர்வுடன் இன்று வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வரலாற்று உச்சத்தை நோக்கி வர்த்தகத்தை நகர்த்தி வருகின்றன.

மும்பை, தேசிய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 7வது நாளாக உயர்வுடன் இன்று வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வரலாற்று உச்சத்தை நோக்கி வர்த்தகத்தை நகர்த்தி வருகின்றன.

சர்வதேச சூழல் சாதகமாக இருப்பது, கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது, டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு அதிகரிப்பு, டாலர் குறியீடு குறைந்தது, பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு அதிகரிப்பு போன்றவை முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளித்தன.

குறிப்பாக அமெரிக்க பெடரல் வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் மாதத்தில் வட்டிவீதம் உயர்வு குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்தார். இது முதலீட்டாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. பெடர்ல் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் ஆசியப் பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் முடிந்தது. இதன் எதிரொலி காலை முதலே இந்தியச் சந்தையிலும் இருந்து வருகிறது.

டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? 4 நகரங்களில் டிசம்பர் 1ல் அறிமுகம்!ஆர்பிஐ அறிவிப்பு

ஏற்கெனவே நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் வரலாற்றுஉச்சமாக 63 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது, தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 18,700 புள்ளிகளைக் கடந்தது. 

இன்று காலை வர்த்தகம் தொடங்கும் முன்பே மும்பை பங்குச்சந்தையில் சென்கெக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 413  புள்ளிகள் உயர்ந்து, 63,512 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 110 புள்ளிகள் உயர்ந்து, 18,868 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. 

ஏற்றத்தில் பயணிக்கும் பங்குச்சந்தை: புதிய உச்சம் நோக்கி நிப்டி! NDTV பங்கு 5% உயர்வு

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 5 நிறுவனப் பங்குகளைத் தவிர மற்ற 25 நிறுவனப் பங்குகளும் லாபத்தில் உள்ளன.  ஐடிசி, மாருதி, மகிந்திரா அன்ட் மகிந்திரா,இந்துஸ்தான்யுனிலீவர், ஏசியன்பெயின்ட் பங்குகள் விலை குறைந்துள்ளன.

நிப்டியில் விப்ரோ, இன்போசிஸ், ஹின்டால்கோ, ஹெச்சிஎல் பங்குகள் லாபத்துடன் நகர்கின்றன, பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ காப்பீடு, ஹெச்யுஎல், மாருதிசுஸூகி,டாடா நுகர்வோர் பொருட்கள் பங்குகள் சரிவில் உள்ளன

வரலாறு படைத்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 63,000புள்ளிகளைக் கடந்து சாதனை! நிப்டி மைல்கல்!

நிப்டியில் தகவல்தொழில்நுட்பத்துறை பங்கு 1.79% வளர்ச்சி அடைந்துள்ளன, உலோகத்துறை 1.03 சதவீதமும், பொதுத்துறை வங்கி 0.61 சதவீதமும், தனியார் வங்கி 0.55 சதவீதமும், வங்கிப்பங்கு 0.52 சதவீதமும்லாபத்துடன் நகர்கின்றன

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

SBI to Hire: ஸ்டேட் பேங்கில் செம்ம வேலை வாய்ப்பு... ஒவ்வொரு காலாண்டுக்கும் 16000 பேருக்கு வேலை..! 300 புதிய கிளை திறக்கப்படும்.!
AI City Rising: பாலைவனத்தில் உருவாகும் பிரமாண்ட "ஏஐ" தொழில் நகரம்.! அரபு நாடுகளில் உருவாகிறதா "போட்டி" சிலிகன் வேலி?!