
காளையின் ஆதிக்கத்தில் முடிவுற்ற இந்திய பங்குவர்த்தகம் ...!!!
வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று, ஏறுமுகத்துடன் முடிந்தது.
ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக நடைபெற்றதால், அதனுடைய எதிரொலியால், இந்தியாவிலும் பங்குச்சந்தை சிறப்பாக இருந்தது.
அதுமட்டும் இல்லாமல், தற்போது, நிறுவனங்கள் அறிவிக்கும் காலாண்டு நிதி அறிக்கை திருப்திகரமாக இருப்பதால், முதலீட்டாளர்கள் , சில நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர் .இதனால், இன்றைய வர்த்தகம் ஏறுமுகத்துடன் காணப்பட்டது.
தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி,15 புள்ளிகள் உயர்ந்து, 8,708.95 புள்ளியில் நிலைபெற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 101 புள்ளிகள் உயர்ந்து: 28,179 புள்ளியில் நிலைபெற்றது
லாபம் கண்ட நிறுவனங்கள் :
ONGC, BPCL, COAL INDIA ,ICICI BANK, TATA MOTORS உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்துடன் முடிந்தது.
இழப்பை சந்தித்த நிறுவங்கள்:
IDEA,WIPRO, HCL TECH ASIAN PAINT உள்ளிட்ட நிறுவன பங்குகள் இழப்பை சந்தித்தன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.