Share market today: முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி லாபம்! ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை

Published : Feb 25, 2022, 03:40 PM ISTUpdated : Feb 25, 2022, 03:41 PM IST
Share market today: முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி லாபம்! ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை

சுருக்கம்

மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் கடந்த ஒரு வாரமாக வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தநிலையில் இன்று சரிவிலிருந்து மீண்டு ஏற்றத்துடன் முடிந்தது.

மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் கடந்த ஒரு வாரமாக வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தநிலையில் இன்று சரிவிலிருந்து மீண்டு ஏற்றத்துடன் முடிந்தது.

 உக்ரைன்-ரஷ்யா போரால் நேற்று வர்த்தகம் தொடங்கியது முதல் கடும்சரிவசைச் சந்தித்தது. ஏறக்குறைய 2,700 புள்ளிகளை இழந்தது, நிப்டி 800க்கும் மேற்பட்ட புள்ளிகளை இழந்தது. முதலீட்டாளர்களுக்கு ஒரேநாளில் ரூ.13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. 

 இந்நிலையில் கடந்த 7 நாட்களாக சந்தையில் இழப்பு தொடர்ந்த சரிவு இன்றுகாலை முதல் முதலீட்டாளர்களு மகிழ்ச்சியளிக்கும் வகையில் பங்குகள் விலை உயரத்தொடங்கின. பங்குகளை ஆர்வத்துடன் கைமாற்றப்பட்டதால், சரிவிலிருந்து விரைவாக மீண்டது

வர்த்தகம் இன்று காலை தொடங்கியவுடன், மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 900புள்ளிகள் வரையில் உயர்ந்து, 55,463 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 267 புள்ளிகள் உயர்ந்து, 16,500 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் தொடர்ந்தது.

மும்பைப்பங்குச்சந்தையில் இன்று வர்தத்கம் முடிவில் சென்செக்ஸ் 1328 புள்ளிகள் உயர்ந்து, 55,858புள்ளிகளில் ஏற்றத்துடன் முடிந்தது. வர்த்தகத்தின் இடையே 56,184 புள்ளிகள்வரை உயர்ந்தது. தேசியப்பங்குச்சந்தையான நிப்டியில் 410புள்ளிகள் உயர்ந்து, 16,658 புள்ளிகளில் முடிந்தது.

மும்பைப் பங்குச்சந்தையில் ஸ்மால்கேப், மிட்கேப் பங்குகள் 4% வரை உயர்ந்தன. சென்செக்ஸ்,நிப்டியில் தலா 2.5% இன்று உயர்ந்தது. நிப்டியில் ரியல்எஸ்டேட், உலோகம்துறை பங்குகள் 4.7 சதவீதம் வரை உயர்ந்தன. வங்கி, ஆட்டமொபைல், தகவல்தொழில்நுட்பம்,மருந்துத்துறை பங்குகள் 3%வரை வளர்ச்சி அடைந்தன.

முதலீட்டாளர்கள் நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.13 லட்சம் கோடியை இழந்தநிலையில், இந்று ரூ.7 லட்சம் கோடியை ஈட்டினர். கடந்த இரு வாரங்களாக இழந்ததை முதலீட்டாளர்கள் இன்று மீட்டனர்.

கச்சா எண்ணெய் விலையும் சர்வதேச சந்தையில் பேரல் 105 டாலராகஇருந்த நிலையில் மெல்லச் சரிந்து 100 டாலரில் நிலை கொண்டது.
பங்குச்சந்தையில் 290 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 304 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் விற்பனையாகின.  இதனால், பொதுத்துறை வங்கிகள், ரியல்எஸ்டேட், ஆட்டோமொபைல், ஐடி, உலோகத்துறை பங்குகள் லாபமீட்டின.

மும்பைப் பங்குச்சந்தையில் இன்டஸ்இன்ட் வங்கி, டாடா ஸ்டீல்,ஜேஎஸ்பில், கோல் இந்தியா, மகிந்திரா அன்ட்மகிந்திரா, பஜாஜ் பின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், விப்ரோ, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ வங்கி ஆகியவை அதிக லாபமீட்டின. நிப்டியில் டாடா மோட்டார்ஸ், யுபிஎல், அதானி போர்ட்ஸ் ஆகிய பங்குகள் லாபமீட்டின.

கிரிப்டோகரன்சி சந்தையிலும் பிட்காயின், எதிரியம், டெரா ஆகியவை 17% உயர்ந்தன. 

உக்ரைன் மீது போர் தொடுத்தரஷ்யா மீது அமெரி்க்கா, பிரிட்டன், ஜெர்மனி,ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளதாராத் தடையால் போர் நீண்டகாலம் நடக்காது என முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள்.

 இதனால் அமெரிக்கப் பங்குச்சந்தை, ஆசியப்பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றுத்துடன் காணப்பட்டது, முதலீட்டாளர்களும் நம்பிக்கையுடன் வர்த்தகத்தை நடத்தினர். இந்த நம்பிக்கையின் எதிரொலி இந்தியப்பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. அதுமட்டுமல்லாமல் குறுகியகால லாபமீட்டும் பங்குகளில் முதலீடு செய்யாமல், நீண்டகாலத்தில் லாபமளிக்கும்பங்குகளி்ல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?