செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற ஜூன் வரை கால அவகாசம் நீட்டிப்பு....!!!ரிசர்வ் வங்கி அதிரடி ...!!
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் , பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற , வரும் ஜூன் வரை கால அவகாசத்தை நீட்டித்து , ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இது ஒரு வாய்பாக இருக்கும். அதே சமயத்தில், பல ஆதாரங்கள் தேவைப்படுகிறது.
மேலும், பெமா விதிப்படி, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் , அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் எந்பது குறிப்பிடத்தக்கது.
என்ன ஆதாரம் வேண்டும்?
தற்போது இந்தியாவில் வசிப்பவர்கள் , தகுந்த ஆதாரங்களை கொண்டு , பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் . மேலும், வெளிநாட்டில் இருந்தவர்கள், தாங்கள் சமீபகாலத்தில் வெளிநாட்டில் இருந்ததற்கான ஆதாரத்தையும், மேலும், இதுவரை வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றி கொள்ளவில்லை என்பதை நிரூபித்தால் மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு :
சென்னை, மும்பை, டெல்லி , கொல்கத்தா நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும்.
மேலும், நேபாளம் , பாகிஸ்தான் , பூடான் வங்க தேசத்தில் வசிக்கும் இந்தியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாது என்பது குறிபிடத்தக்கது.